மகன்கள் மீது அவசர கதியில் வழக்கு பதிவு செய்த காவல்துறை - பாடகர் மனோ மனைவி குற்றச்சாட்டு!
Aug 30, 2025, 09:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகன்கள் மீது அவசர கதியில் வழக்கு பதிவு செய்த காவல்துறை – பாடகர் மனோ மனைவி குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Sep 17, 2024, 12:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாடகர் மனோ மகன்கள்  மீதான புகார் தொடர்பாக காவல்துறையினர் அவசர கதியில் வழக்கு பதிவு செய்துள்ளதாக மனோவின் மனைவி ஜமீலா தெரிவித்துள்ளார். புதிய சிசிடிவி பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

பாடகர் மனோவின் மகன்களால் தாக்கப்பட்டதாக மதுரவாயலைச் சேர்ந்த கிருபாகரன் என்ற இளைஞரும், 16 வயது சிறுவனும் கடந்த வாரம் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மனோ மகன்களின் நண்பர்கள் இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மனோவின் மகன்களான சாஹிர், ரஃபீக் ஆகியோர் தலைமறைவான நிலையில், மனோவின் மகன்கள் தங்களை மதுபோதையில் தாக்கியதாக புகார் அளித்தவர்கள் குற்றச்சாட்டினர்.

இந்நிலையில் மனோவின் மகன்களும், புகார் அளித்த எதிர்தரப்பினரும் மோதிக்கொள்ளும் புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த காட்சிகளில் பாடகர் மனோவின் மகன்களை ஒரு இளைஞர் விரட்டிச்சென்று தாக்கும் காட்சி வெளியாகியுள்ளது.

இந்த சிசிடிவி காட்சிகள் தொடர்பாக பேட்டியளித்துள்ள பாடகர் மனோவின் மனைவி ஜமீலா, தன்னிடம் ஆதாரம் இல்லாததால்தான் இதுவரை பேசவில்லை என்றும், தற்போது உண்மை என்ன என்பதை புதிய வீடியோவில் அவைரும் பார்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் தங்களிடம் விசாரிக்காமல் அவசர கதியில் வழக்குப்பதிவு செய்ததாக குற்றம்சாட்டினார். இந்த விவகாரத்தால் தனது மகன்கள் எங்கு உள்ளார்கள் என்பது கூட தமக்கு தெரியவில்லை என வேதனை தெரிவித்த அவர், இந்த வீடியோவை பார்த்துவிட்டாவது மகன்கள் நேரில் வர வேண்டும் என கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டார்.

இதனை தொடர்ந்து பேசிய மனோவின் மருமகள், தனது கணவர் மற்றும் அவரது அண்ணன் மீது தாக்குதல் நடத்தியவர்கள் தங்கள் பகுதியைச் சேர்ந்தவர்கள் இல்லை என தெரிவித்தார்.

தாக்குதலின் பின்னணியில் வேறு ஏதோ காரணம் உள்ளது என்றும், தனது மாமனாரின் பெயரை கெடுக்கும் நோக்கத்தில் நடந்ததாக தெரிகிறது எனவும் குற்றம்சாட்டினார். மேலும், வீட்டில் தனியாக இருப்பதால், தங்களின் பாதுகாப்பு கருதி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக கூறிய அவர், தனது கணவர் மற்றும் அவரது அண்ணன் மீது கொடூர தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Tags: Chennaisinger manocase aganist mano sonsmano wife jameela
ShareTweetSendShare
Previous Post

மீலாது நபி பெருநாள் – தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து!

Next Post

ஆத்தூர் அருகே இருதரப்பினர் மோதல் – விசாரிக்க சென்ற காவல் அதிகாரி மீது தாக்குதல்!

Related News

இந்தியாவை குறி வைத்த விளைவு : படுகுழியில் அமெரிக்கா – சரியும் டாலரின் ஆதிக்கம்!

நீதிமன்றத் தீர்ப்பு அமெரிக்காவிற்கே பேரழிவு : டிரம்பின் அடுத்தக்கட்ட நகர்வு என்ன?

ஜப்பானுக்காக சீன ராணுவ அணிவகுப்பை தவிர்த்த இந்தியா!

உலகின் பணக்கார பிச்சைக்காரர் : மொத்த சொத்து மதிப்பு 7.5 கோடி ரூபாய்!

அனைத்து மாவட்டங்களிலும் பாஜகவுடன் இணைந்து செயல்பட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்!

இந்திய மருந்துகள் முன் அடிபணிந்த அதிபர் டிரம்ப் : சுங்க வரியில் இருந்து விலக்கு அளித்த பின்னணி!

Load More

அண்மைச் செய்திகள்

வெள்ள பாதிப்பால் பரிதவிக்கும் பஞ்சாப் – தீவுகளான நகரங்கள்!

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் – இபிஎஸ் கேள்வி!

அரசுத் துறைகளில் 3.50 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று சொன்னீங்களே செஞ்சீங்களா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

2 தேஜஸ் மார்க் 1ஏ ஜெட் விமானங்கள் இந்திய விமானப்படையில் இணைய உள்ளது : பாதுகாப்புத்துறைச் செயலாளர் ஆர்.கே சிங்

மதுரைக்கு கொண்டுவரப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

திருப்பத்தூர் : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் முதியவர் மீது தாக்குதல்!

முதல்வரின் வெளிநாட்டுப் பயணங்கள் – வெள்ளை அறிக்கை எப்போது வெளியாகும்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

கர்நாடகாவில் பள்ளி கழிவறையில் குழந்தையை பெற்றெடுத்த மாணவி!

பெங்களூருவில் அனைவரின் கவனத்தை ஈர்த்த சமையலறை கழிவுகளை உரமாக மாற்றும் இயந்திரம்!

ஆலைகளுக்குள் இயங்கும் வாகனங்களுக்கு வாகன வரி இல்லை : உச்சநீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies