விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சமூக நீதியை பற்றி பேச அருகதை கிடையாது என மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே பாஜக அமைப்புச்சாரா ஓட்டுநர்கள் பிரிவு சார்பாக ஆட்டோ ஓட்டுநர்கள் கொண்டாடிய ஆயுத பூஜை விழாவில் மத்திய அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பாஜக அமைப்புச்சார ஓட்டுநர்களுக்கு குக்கர் மற்றும் இனிப்பு வகைகளை எல்.முருகன் வழங்கினார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூரியதாவது:
“இன்று எழும்பூர் ரயில் நிலையம் அருகே ஆட்டோ ஓட்டுநர்கள் ஆயுத பூஜை விழாவை கொண்டாடினர். மிழகத்தில் பாஜகவின் உறுப்பினர் சேர்க்கையும் வேகமாக நடைபெற்று வருகிறது. ஆன்மீகம் மற்றும் தேசத்தின் பக்கம் மக்கள் நிற்கிறார்கள் என தெரிவித்தார்.
திமுக தலைவர் திட்டமிட்டு ஆளுநர் மீது குற்றச்சாட்டை வைக்கிறார்.
தமிழ்தாய் வாழ்த்தை குழந்தைகள் தவறாக பாடி உள்ளனர் அவர்கள் நிர்வாகத்திடம் மன்னிப்பு கேட்டு உள்ளனர். அதற்காக விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆளுநர் மீது முதலமைச்சர் குற்றம் சாட்டுவது ஏற்புடையது அல்ல என தெரிவித்தார்.
திருவள்ளூவர்க்கு கலாச்சார மையங்களை அமைக்கப்படும் என்று சொல்லி இருந்தோம். பாஜக ஆட்சிக்கு வந்து 100 நாளில் நான்கு இடங்களில் அமைத்து இருக்கிறோம் என எல்.முருகன் கூறினார்.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தமிழர்களின் அடையாளமான செங்கோல் நிறுவி தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார் பிரதமர் மோடி. தமிழுக்கும், தமிழ் மொழிக்கும் பிரதமர் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் பாஜக தமிழுக்கு எதிரானது போல் கருதாக்கத்தை உருவாக்க திமுக முயற்சி செய்து வருகிறது. திமுக அரசாங்கம் சென்னை வெள்ளத்தில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
சென்னையை வெள்ளத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும் வேளச்சேரி பகுதியில் இன்றும் தண்ணீர் நிற்கிறது. மக்களை வெள்ளத்தில் இருந்து பாதுகாப்பாதை விட்டு விட்டு மக்களை திசை திருப்பும் முயற்சியில் திமுக ஈடுபட்டு வருகிறது.
ஆளுநர் தன் வேலையை செய்து கொண்டிருக்கிறார் உண்மையைப் பேசிக் கொண்டிருக்கிறார். உண்மையை சொல்லும்பொழுது திமுக தலைவர்களுக்குமா திமுக நிர்வாகிகளுக்கும் கசப்பை கொடுத்து வருகிறது. அந்த கசப்பை அவர்கள் ஏற்றுக்கொள்ள தான் வேண்டும் என திருமாவளவன் தெரிவித்தார். திருமாவளவனின் முதலமைச்சர் கனவு பலிக்காது என்றும் அவர் கூறினார்.