தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், சென்னை முழுவதும் பொது மக்களின் பாதுகாப்பு கருதி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் சென்னை தியாகராய நகர், பாண்டி பஜார் உள்ளிட்ட பகுதிகளில் ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை காவல் ஆணையர் அருண் ஆய்வு மேற்கொண்டார். மாம்பழம் காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறையையும் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது : ரங்கநாதன் தெரு சுற்றிலும் 64 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது, இந்த 64 கேமராக்களும் எஃப்ஆர்எஸ்(FRS) என்று அழைக்கப்படும் FACE RECOGNISING SYSTEM வசதி கொண்டவை என்றும் அவர் தெரிவித்தார். கூட்டத்தில் காணாமல் போகும் குழந்தைகளை கண்டுபிடிக்க டேக் சிஸ்டம் உள்ளதாகவும் அவர் கூறினார்.
தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்லும் நபர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் நடவடிக்கைள் காவல்துறை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.