விஜய் மற்றும் அவரது கட்சியைப் பார்த்து சீமான் பயப்படுகிறார் என நாம் தமிழர் கட்சியின் முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமரன் தெரிவித்துள்ளார்.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகத்தில் உள்ள எண்ணற்ற இளைஞர்களை கொண்டு இயக்கமாக தொடங்கப்பட்ட இயக்கம் வளர வளர சீமான் அதிகாரப்போக்குடன் செயல்பட்டதாக குற்றம் சாட்டினார்.
நாம் தமிழர் கட்சியில் சீமானால் புறக்கணிக்கப்பட்டவர்களும், வெளியேறியவர்களும் இணைந்து தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கத்தை தொடங்கி இருப்பதாகவும், வரும் நவம்பர் 27 ஆம் தேதி வீர வணக்க நாளை நடத்த இருப்பதாகவும் அவர் கூறினார்.
நாம் தமிழர் கட்சிக்கு வெளிநாடுகளில் இருந்து நிதியளிப்பவர்களுக்கு சீமான் அவமானத்தையும், ஏமாற்றத்தையும் அளிப்பதாக கூறிய வெற்றிக்குமரன், புதியதாக அரசியல் கட்சி தொடங்கியிருக்கும் விஜய்யை பார்த்து சீமான் பயப்படுவதாகவும் கூறினார்