பேச்சுவார்த்தையில் மூலம் கிடைக்கும் தீர்வுகளையே இந்தியா விரும்புவதாகவும், போரினால் அல்ல என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் கஸான் நகரில் நடைபெற்ற ப்ரிக்ஸ் கூட்டமைப்பின் 16வது உச்சி மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, ஜோகனஸ்பர்கில் நடைபெற்ற 15வது உச்சிமாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிகாட்டும் கொள்கைகள், தரநிலைகள், அளவுகோல்கள் அனைத்தையும் ப்ரிக்ஸ் உறுப்பு நாடுகள் பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
ஐ.நா பாதுகாப்பு கவுன்சில், உலக வர்த்தக அமைப்பு ஆகியவற்றில் சீர்திருத்தம் அவசியம் எனக்கூறிய பிரதமர், பேச்சுவார்த்தையில் கிடைக்கும் தீர்வுகளையே இந்தியா விரும்புவதாகவும், போரினால் அல்ல என்றும் தெரிவித்தார்.
ப்ரிக்ஸ் கூட்டமைப்பில் புதிய நாடுகளை இணைப்பதை இந்தியா வரவேற்கும் என்றும், இது தொடர்பான அனைத்து முடிவுகளும் ஒருமனதாக எடுக்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.