சென்னை ராஜாஜி சாலையில் உள்ள ரிசர்வ் வங்கியில் பணியாற்றிய பெண் காவலரின் துப்பாக்கி தவறுதலாக சுட்டதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
ராஜாஜி சாலையில் செயல்பட்டு வரும் ரிசர்வ் வங்கி வளாகத்தில் அபாய எச்சரிக்கை ஒலி அடித்தது. இதனால் பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் தர்ஷினி தான் கையில் வைத்திருந்த துப்பாக்கியை லோடு செய்தார். ஆனால் தவறுதலாக எச்சரிக்கை மணி அடித்திருப்பதை அறிந்த அவர் துப்பாக்கியில் இருந்து தோட்டாவை வெளியே எடுக்க முயற்சித்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக துப்பாக்கி அதிக சத்ததுடன் சுட்டது. தோட்டா சுவரில் குண்டு பாய்ந்ததால் எவ்வித பாதிப்பும் இன்றி பெண் காவலர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் தடவியல் நிபுணர்கள் உதவியுடன் துப்பாக்கி எப்படி சுட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.