சென்னையில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது குழந்தையின் கழுத்தை அறுத்த மாஞ்சா நூல் - படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி!
Aug 24, 2025, 02:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னையில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது குழந்தையின் கழுத்தை அறுத்த மாஞ்சா நூல் – படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி!

Web Desk by Web Desk
Nov 18, 2024, 02:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் பெற்றோருடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது மாஞ்சா நூல் சிக்கி அறுத்ததில், படுகாயமடைந்த குழந்தைக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் வசித்து வருபவர் பாலமுருகன். மெக்கானிக்காக பணியாற்றி வரும் இவர் தனது இருசக்கர வாகனத்தில், மனைவி கௌசல்யா மற்றும் இரண்டரை வயது ஆண் குழந்தை புகழ் வேலுடன் வியாசர்பாடி மேம்பாலம் அருகே சென்றுகொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக அறுந்து விழுந்த மாஞ்சா நூல் கண்ணிமைக்கும் நேரத்தில், குழந்தையின் கழுத்தில் சிக்கி அறுத்து விபத்து ஏற்பட்டது. இதில் கழுத்தில் படுகாயமடைந்த குழந்தையை மீட்ட பெற்றோர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். கழுத்தில் 7 தையல்கள் போடப்பட்டு ஆபத்தான நிலையில், குழந்தைக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல, வியாசர்பாடி புதிய மேம்பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கறிவெட்டும் தொழிலாளியான ஜிலானி பாஷா என்பவருக்கும், மாஞ்சா நூல் சிக்கி அறுத்ததில் கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டது. அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவங்கள் தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்களின் பேரில், மாஞ்சா நூலில் காற்றாடி விட்ட பள்ளி மாணவர்கள் உட்பட 8 பேரை வியாசர்பாடி போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து நூற்றுக்கணக்கான காற்றாடிகள், மாஞ்சா நூல் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், தடையை மீறி மாஞ்சா காற்றாடி விடும் நபர்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Chennaichild injuredntensive treatmentKodunkaiyur Muthamil Nagarமாஞ்சா நூல்majna threat
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் குழந்தைகளுடன் கால்பந்து விளையாடிய நட்சத்திர வீரர்!

Next Post

வத்தலகுண்டு அருகே கூகுள் மேப்பை நம்பி 7 மணி நேரம் சேற்றில் சிக்கி தவித்த ஐயப்ப பக்தர் – பத்திரமாக மீட்ட போலீசார்!

Related News

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

உதகை – மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்!

தர்மஸ்தலா விவகாரத்தை வழிநடத்தியது யார்? – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி!

வாலஜாபேட்டை அருகே பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து!

தர்மஸ்தலா உடல்கள் புதைப்பு விவகாரம் – புகார் அளித்தவரை கைது செய்தது விசாரணைக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies