சென்னையில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது குழந்தையின் கழுத்தை அறுத்த மாஞ்சா நூல் - படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி!
Jul 2, 2025, 09:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது குழந்தையின் கழுத்தை அறுத்த மாஞ்சா நூல் – படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி!

Web Desk by Web Desk
Nov 18, 2024, 02:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் பெற்றோருடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது மாஞ்சா நூல் சிக்கி அறுத்ததில், படுகாயமடைந்த குழந்தைக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் வசித்து வருபவர் பாலமுருகன். மெக்கானிக்காக பணியாற்றி வரும் இவர் தனது இருசக்கர வாகனத்தில், மனைவி கௌசல்யா மற்றும் இரண்டரை வயது ஆண் குழந்தை புகழ் வேலுடன் வியாசர்பாடி மேம்பாலம் அருகே சென்றுகொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக அறுந்து விழுந்த மாஞ்சா நூல் கண்ணிமைக்கும் நேரத்தில், குழந்தையின் கழுத்தில் சிக்கி அறுத்து விபத்து ஏற்பட்டது. இதில் கழுத்தில் படுகாயமடைந்த குழந்தையை மீட்ட பெற்றோர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். கழுத்தில் 7 தையல்கள் போடப்பட்டு ஆபத்தான நிலையில், குழந்தைக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல, வியாசர்பாடி புதிய மேம்பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கறிவெட்டும் தொழிலாளியான ஜிலானி பாஷா என்பவருக்கும், மாஞ்சா நூல் சிக்கி அறுத்ததில் கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டது. அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவங்கள் தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்களின் பேரில், மாஞ்சா நூலில் காற்றாடி விட்ட பள்ளி மாணவர்கள் உட்பட 8 பேரை வியாசர்பாடி போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து நூற்றுக்கணக்கான காற்றாடிகள், மாஞ்சா நூல் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், தடையை மீறி மாஞ்சா காற்றாடி விடும் நபர்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Chennaichild injuredntensive treatmentKodunkaiyur Muthamil Nagarமாஞ்சா நூல்majna threat
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் குழந்தைகளுடன் கால்பந்து விளையாடிய நட்சத்திர வீரர்!

Next Post

வத்தலகுண்டு அருகே கூகுள் மேப்பை நம்பி 7 மணி நேரம் சேற்றில் சிக்கி தவித்த ஐயப்ப பக்தர் – பத்திரமாக மீட்ட போலீசார்!

Related News

மதுரையில் அர்ச்சனை தட்டு வாங்குவது தொடர்பாக வாக்குவாதம் – திமுக எம்பி மகனை தாக்கியதாக இருவர் கைது!

சென்னையில் பாஜக ஆர்பாட்டம் – நாராயணன் திருப்பதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை வலுக்கட்டாயமாக கைது செய்த போலீஸ்!

திருச்செந்தூர் முருகன் கோயில் யாகசாலை பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு நேரத்தை மாற்றக்கோரிய மனு தள்ளுபடி!

பரமக்குடி – ராமநாதபுரம் இடையே 4 வழிச்சாலை – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

அஜித்குமாரின் உடலில் 44 காயங்கள், கொலை செய்யப்பட்டவர்களின் உடலில் கூட இத்தனை காயங்கள் கிடையாது – மதுரை உயர் நீதிமன்றம் அதிர்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்புவனம் அஜித்குமார் வழக்கு – மதுரை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

திருப்புவனம் அஜித்குமார் வழக்கு – சிபிஐ விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு பரிந்துரை!

நடக்கக் கூடாதது நடந்து விட்டது – உயிரிழந்த அஜித்குமாரின் தாயாரிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் ஸ்டாலின்!

தேர்தல் வருவதால் சிபிஐ விசாரணைக்கு மாற்ற பரிந்துரையா ? – அண்ணாமலை கேள்வி!

திமுக ஆட்சியில் 25 லாக்-அப் மரணங்கள் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட சிவகங்கை எஸ்.பி – புதிய காவல்துறை கண்காணிப்பாளராக சந்தீஷ் பொறுப்பேற்பு!

பிரதமர் மோடி 8 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் – கானா, அர்ஜெண்டினா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்கிறார்!

வங்கதேச சணல் – இறக்குமதிக்கு தடை!

ஏவுகணை மூலம் இலக்கை அழிக்கும் பங்கர் பஸ்டர் குண்டு – சிறப்பு கட்டுரை!

RAW புதிய தலைவர் : நாட்டின் பாதுகாப்புக்கு புதிய நம்பிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies