சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்லவிருந்த விமானத்தில் பெட்ரோல் கசிவு இருந்ததை விமானி கண்டறிந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட இருந்தது. இந்த விமானத்தில் 145 பயணிகள் இருந்தனர். இந்நிலையில், விமானம் புறப்படுவதற்கு முன்பாக விமானி இறுதிக்கட்ட பரிசோதனையை மேற்கொண்டார்.
அப்போது விமானத்தில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டிருப்பதை கண்டறிந்த அவர், உடனடியாக விமானத்தை நிறுத்தி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து பொறியாளர்கள் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் விரைந்து வந்து விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.