யுஜிசி தொடர்பான தீர்மானம் தேவையற்றது - முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கருத்து!
Aug 24, 2025, 06:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

யுஜிசி தொடர்பான தீர்மானம் தேவையற்றது – முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கருத்து!

Web Desk by Web Desk
Jan 11, 2025, 03:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

யுஜிசி விதிமுறைகள் குறித்து தமிழக சட்டப்பேரவையின் தீர்மானம் தேவையற்றது என அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக பல்கலைக் கழக மானியக் குழு அண்மையில் பிறப்பித்துள்ள புதிய விதிமுறைகளைத் திரும்பப்பெற வேண்டும் என தமிழக சட்டப்பேரவையில் அவசர தீர்மானம் நிறைவேற்றியுள்ளது விந்தையாக இருக்கிறது எனவும்,

யுஜிசி விதிமுறைகளை சரியாக புரிந்து கொள்ளாமல் திமுக கூட்டணிக் கட்சிகள் இந்த தீர்மானத்தை ஆதரித்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், யுஜிசி பிறப்பித்துள்ள விதிமுறைகள் தற்போது வரைவு நிலையில்தான் உள்ளன எனவும், மக்கள் தங்களது யோசனைகளை தெரிவிக்க 30 நாட்கள் அவகாசம் இருக்கிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, யுஜிசி விதிகள் குறித்து தமிழக சட்டப் பேரவையின் தீர்மானம் தேவையற்றது என பாலகுருசாமி கூறியுள்ளார். மேலும், துணைவேந்தர்களை மாநில அரசே நியமித்தால் ஊழல் மற்றும் பாரபட்சம் மீண்டும் வந்து, உயர்கல்வியின் தரம் சிதைந்துவிடும் என்று அச்சம் தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில், துணைவேந்தர் பதவி, தரகர்கள் உதவியோடு 5 முதல் 10 கோடி ரூபாய் வரை ஏலம் விடப்பட்டது என்று முன்னாள் துணைவேந்தர் அனந்த கிருஷ்ணன் கூறியதை சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுபோலவே, அரசு நிதியுதவி பெறும் பல்கலைக் கழகங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் பியூன் முதல் பேராசிரியர் வரையிலான பதவிகளை நிரப்ப தொகை நிர்ணயிக்கப்பட்டது என்று வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

எனவே, நாட்டின் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் யுஜிசி விதிமுறைகளைக் கண்டிப்பாக பின்பற்றியே ஆக வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மத்திய ஒழுங்குமுறை அமைப்புகளுடன் மோதும் போக்கை தமிழக அரசு கைவிட்டு, உயர்கல்வியின் நலனுக்காக யுஜிசியுடன் இணங்கிச் செயல்பட வேண்டிய தருணம் இது என பாலகுருசாமி வலியுறுத்தியுள்ளார்.

Tags: tamil Nadu Legislative AssemblyUniversity Grants CommissionBALAGURUSAMYUGC regulations resolutionFormer Anna University Vice-Chancellor Balagurusamy
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளில் பொங்கல் விழா கோலாகலம்!

Next Post

தேர்தல் ஆணையம் அனுமதி – ஈரோடு கிழக்கு தொகுதியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடக்கம்!

Related News

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

உதகை – மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்!

தர்மஸ்தலா விவகாரத்தை வழிநடத்தியது யார்? – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி!

வாலஜாபேட்டை அருகே பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து!

தர்மஸ்தலா உடல்கள் புதைப்பு விவகாரம் – புகார் அளித்தவரை கைது செய்தது விசாரணைக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies