யுஜிசி தொடர்பான தீர்மானம் தேவையற்றது - முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கருத்து!
Jan 18, 2026, 01:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

யுஜிசி தொடர்பான தீர்மானம் தேவையற்றது – முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கருத்து!

Murugesan M by Murugesan M
Jan 11, 2025, 03:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

யுஜிசி விதிமுறைகள் குறித்து தமிழக சட்டப்பேரவையின் தீர்மானம் தேவையற்றது என அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக பல்கலைக் கழக மானியக் குழு அண்மையில் பிறப்பித்துள்ள புதிய விதிமுறைகளைத் திரும்பப்பெற வேண்டும் என தமிழக சட்டப்பேரவையில் அவசர தீர்மானம் நிறைவேற்றியுள்ளது விந்தையாக இருக்கிறது எனவும்,

யுஜிசி விதிமுறைகளை சரியாக புரிந்து கொள்ளாமல் திமுக கூட்டணிக் கட்சிகள் இந்த தீர்மானத்தை ஆதரித்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், யுஜிசி பிறப்பித்துள்ள விதிமுறைகள் தற்போது வரைவு நிலையில்தான் உள்ளன எனவும், மக்கள் தங்களது யோசனைகளை தெரிவிக்க 30 நாட்கள் அவகாசம் இருக்கிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, யுஜிசி விதிகள் குறித்து தமிழக சட்டப் பேரவையின் தீர்மானம் தேவையற்றது என பாலகுருசாமி கூறியுள்ளார். மேலும், துணைவேந்தர்களை மாநில அரசே நியமித்தால் ஊழல் மற்றும் பாரபட்சம் மீண்டும் வந்து, உயர்கல்வியின் தரம் சிதைந்துவிடும் என்று அச்சம் தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில், துணைவேந்தர் பதவி, தரகர்கள் உதவியோடு 5 முதல் 10 கோடி ரூபாய் வரை ஏலம் விடப்பட்டது என்று முன்னாள் துணைவேந்தர் அனந்த கிருஷ்ணன் கூறியதை சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுபோலவே, அரசு நிதியுதவி பெறும் பல்கலைக் கழகங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் பியூன் முதல் பேராசிரியர் வரையிலான பதவிகளை நிரப்ப தொகை நிர்ணயிக்கப்பட்டது என்று வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

எனவே, நாட்டின் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் யுஜிசி விதிமுறைகளைக் கண்டிப்பாக பின்பற்றியே ஆக வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மத்திய ஒழுங்குமுறை அமைப்புகளுடன் மோதும் போக்கை தமிழக அரசு கைவிட்டு, உயர்கல்வியின் நலனுக்காக யுஜிசியுடன் இணங்கிச் செயல்பட வேண்டிய தருணம் இது என பாலகுருசாமி வலியுறுத்தியுள்ளார்.

Tags: BALAGURUSAMYUGC regulations resolutionFormer Anna University Vice-Chancellor Balagurusamytamil Nadu Legislative AssemblyUniversity Grants Commission
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளில் பொங்கல் விழா கோலாகலம்!

Next Post

தேர்தல் ஆணையம் அனுமதி – ஈரோடு கிழக்கு தொகுதியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடக்கம்!

Related News

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

Load More

அண்மைச் செய்திகள்

வத்தலகுண்டு அருகே வாழைப்பழம் சூறை எறியும் விழா கோலாகலம்!

30 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் – மலரும் நினைவுகளை பகிர்ந்து ஆனந்தம்!

அனுமன் சிலையை 36 மணி நேரத்திற்கும் மேலாக சுற்றி வந்த தெரு நாய்!

கிராமத்திற்கு கார்களில் வந்து குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள் – முதியவரின் செயலால் திருவிழா கோலம்

கிரீன்லாந்து விவகாரம் : எதிர்க்கும் நாடுகள் மீது சுங்கவரி..டிரம்ப் எச்சரிக்கை

பாகிஸ்தான் வேஸ்ட்..! இந்தியா தான் பெஸ்ட்..! – குடியரசு கட்சி எம்பி ரிச் மெக்கார்மிக்

மத்திய அரசின் தீவிர நடவடிக்கையால் ஈரானில் இருந்து பாதுகாப்பாக தாயகம் திரும்பும் இந்தியர்கள்!

கோலாகலமாக நடைபெற்ற பட்டம் விடும் திருவிழா – மாஞ்சா நூல் பட்டு 5,400 மேற்பட்ட பறவைகள் காயம்!

பரமக்குடி அருகே தீப்பிடித்து எரிந்த ஆம்னி பேருந்து – நல்வாய்ப்பாக உயிர் தப்பிய பயணிகள்!

தை அமாவாசை – முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க நீர்நிலைகளில் குவிந்த பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies