திமுக கொடி கட்டிய காரில் சென்று பெண்களை மிரட்டிய கும்பல் - இபிஎஸ் கண்டனம்!
Aug 10, 2025, 05:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திமுக கொடி கட்டிய காரில் சென்று பெண்களை மிரட்டிய கும்பல் – இபிஎஸ் கண்டனம்!

Web Desk by Web Desk
Jan 29, 2025, 01:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை ஈ.சி.ஆர். சாலையில் காரில் சென்ற பெண்களை மிரட்டியவர்கள் உடனடியாக கைது செய்ய வேண்டும் என அதிமுக பொதுசெயலாளர்  வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக  அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : “சென்னை ஈ.சி.ஆர். சாலையில், காரில் சென்ற பெண்களை திமுக கொடி பொருத்திய காரில் வந்த சிலர், சாலையின் நடுவில் மறித்து, அப்பெண்களை அச்சுறுத்தும் வகையில், சினிமா காட்சிகளைக் காட்டிலும் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்த முயன்ற காட்சி நெஞ்சை பதைக்க வைப்பதாக தெரிவித்துள்ளார்.

அவர்களிடம் இருந்து தப்பித்த பெண்களை வீடு வரை துரத்தி வந்த கயவர்கள், வீட்டில் இருந்த உறவினர்களும் அக்கம் பக்கத்தினரும் கூடியதால் அங்கிருந்து சென்றதாகவும், இது குறித்து புகாரளித்தால் “இரவு நேரத்தில் உங்களை யார் வெளியே போகச்சொன்னது” என்று காவல்துறையினர் கேட்டதாகவும் பாதிக்கப்பட்டோர் தரப்பில் கூறுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பெண்கள் இரவு நேரத்தில் நடமாடும் சுதந்திர உரிமை கூட ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் பறிக்கப்பட்டிருக்கிறதா? பெண்களுக்கு எதிரான குற்றங்களை மேற்கொள்ள திமுக கொடி உள்ளிட்ட ஆளுங்கட்சி அடையாளம் என்பது லைசன்சா? குற்றம் செய்பவர்கள் திமுகவினர் என்றால் காவல்துறை ஆமை வேகத்தில், காலம் தாழ்ந்து தான் செயல்படுமா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

யார்_அந்த_SIR என்ற நீதிக்கான கேள்விக்கு எரிச்சல் அடைந்த ஸ்டாலின், இந்த SIR-கள் பற்றி என்ன சொல்லப் போகிறார்? மாநிலத்தின் பிரதான சாலையான ECR-ல், பெண்களை இப்படி கொடூரமாக வழிமறித்து தைரியமாக தாக்க முயலும் அளவிற்கு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை அடியோடு கெடுத்துள்ள இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார்.

இந்த வழக்கில், நேர்மையாக FIR பதிந்து, பாதிக்கப்பட்டோர் விவரம் லீக் ஆகாததை உறுதிசெய்து, அரசியல் தலையீடு இல்லாமல் இக்குற்றத்தில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்து, உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Tags: Chennaiepsecr road
ShareTweetSendShare
Previous Post

சென்னை விமான நிலையத்தில் ரூ. 23 கோடி மதிப்பிலான உயர் ரக கஞ்சா பறிமுதல்!

Next Post

ஐயாறப்பர் கோவில் மகா கும்பாபிஷேகம்: தருமபுர ஆதீனம் நேரில் ஆய்வு!

Related News

சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டம் : 7-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி!

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை பாகிஸ்தானை மண்டியிட செய்தது – பிரதமர் மோடி

நடிகர் தனுசுடன் காதலா? – பிரபல நடிகை மறுப்பு!

ஜம்மு-காஷ்மீரில் 10-வது நாளாக தொடரும் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை!

உசிலம்பட்டி அருகே பாஜக பிரமுகரின் காருக்கு தீ வைத்த மர்ம நபர் – சிசிடிவி காட்சி வெளியானது!

உலகின் பெரிய சக்தியாக இந்தியா மாறுவதை யாராலும் தடுக்க முடியாது – ராஜ்நாத்சிங்

Load More

அண்மைச் செய்திகள்

கடந்த 6 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாத 334 அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கம் – தேர்தல் ஆணையம் நடவடிக்கை!

துணை முதல்வர் திறந்து வைத்த கரூர் புதிய பேருந்து நிலையம் – குளம் போல் நீர் தேங்கியதால் பயணிகள் அவதி!

சேலத்தில் அரசுப்பேருந்து மோதியதில் பெண் படுகாயம்!

எந்த வாக்காளரும் முன்னறிவிப்பின்றி நீக்கப்பட மாட்டார்கள் – உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்!

பெங்களூருவில் வந்தே பாரத் மற்றும் மெட்ரோ ரயில் சேவை – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

அலங்காநல்லூர் அருகே செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களுக்கு மிரட்டல் விடுத்த திமுக நிர்வாகி!

சென்னையில் நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜக மாநில நிர்வாகிகளுக்கான பயிலரங்கம் – எல்.முருகன், அண்ணாமலை பங்கேற்பு!

வடமதுரை சௌந்தரராஜ பெருமாள் கோயில் ஆடித் தேரோட்டம்!

இந்திய விமானங்களுக்கு வான்வெளி மூடல் – பாகிஸ்தானுக்கு இரு மாதங்களில் 1,240 கோடி இழப்பு!

பண்டிகை காலங்களில் ஒரே ரயிலில் பயணம் செய்து திரும்பும் பயணிகளுக்கு டிக்கெட் கட்டணத்தில் 20 % தள்ளுபடி – ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies