பரதத்தில் ஜொலிக்கும் நாட்டிய தாரகை!
Aug 24, 2025, 09:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பரதத்தில் ஜொலிக்கும் நாட்டிய தாரகை!

Web Desk by Web Desk
Mar 8, 2025, 08:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இலங்கையிலிருந்து அகதியாக தமிழகத்திற்குள் நுழைந்து தன் அசாத்திய திறமையால் நூற்றுக்கும் அதிகமான மாணவிகளுக்கு பரத நாட்டியம் கற்றுத் தரும் ஆசிரியையாக மாறியிருக்கிறார் ஜெகதீஸ்வரி சசிதரன். மகளிர் தினத்தை கொண்டாடும் இவ்வேளையில் ஜெகதீஸ்வரி சசிதரனின் சவால்கள் மிக்க வாழ்க்கைப் பயணத்தை சிறு செய்தித் தொகுப்பாக பார்க்கலாம்.

1990 களில் இலங்கையில் நடைபெற்ற போரில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள தமிழகத்திற்கு அகதிகளாக வந்த பல்லாயிரக்கணக்கானோர்களில் ஒருவர் தான் இந்த ஜெகதீஸ்வரி சசிதரன். 7 மாத குழந்தையாக தமிழகத்திற்கு வந்த ஜெகதீஸ்வரி, தற்போது நாட்டியத்தில் சாதிக்கத் துடிக்கும் ஏராளமான மாணவர்களின் வழிகாட்டியாக திகழ்கிறார்.

நடனம் மீது சிறுவயது முதலே மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த ஜெகதீஸ்வரி, சினிமாத்துறைக்குள் கால் பதிக்க வேண்டும் என்ற ஆசையில் நடனக் கலையை தீவிரமாக பயிலத் தொடங்கினார். நடனத்திலிருந்த ஆர்வம் படிப்படியாக பரதநாட்டியத்தின் பக்கம் திரும்பியது. இலங்கையைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக பரதநாட்டியத்தை கற்க பல்வேறு சவால்களை எதிர்கொண்ட ஜெகதீஸ்வரி, பின்னாளில் அதில் தனித்துவமிக்கவராகவும் திகழத் தொடங்கினார்.

மிகப்பெரிய போராட்டத்திற்கு பின் இசைக்கல்லூரியில் சேர்ந்த ஜெகதீஸ்வரி, பரதக் கலையை பயின்றி சிறந்த மாணவியாக தேர்ச்சி பெற்றதோடு, பகுதிநேர ஆசிரியராகவும் பணியாற்றத் தொடங்கினார். 2010 ஆம் ஆண்டு முதல் பல்வேறு மேடைகளில் பரத நாட்டியத்தை ஆடி, தனது நடன அசைவால் அனைவரின் கவனத்தையும் தன்பக்கம் திருப்பிய ஜெகதீஸ்வரி, தற்போது தவிர்க்க முடியாத பரதநாட்டிய கலைஞராக திகழ்ந்து வருகிறார்.

பரதக் கலையை கற்க தான் சந்தித்த இடையூறுகளை பிறர் சந்தித்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த ஜெகதீஸ்வரி, ஏற்றத்தாழ்வின்றி ஏழை மாணவர்கள் பலருக்கு தான் கற்ற பரதக் கலையை பயிற்றுவித்து வருகிறார்.

ஜெகதீஸ்வரி சசிதரனின் கலைத்திறனை பாராட்டி நூற்றுக்கணக்கான விருதுகள் பல்வேறு சமூக அமைப்புகளின் மூலமாக வழங்கப்பட்டுள்ளன. பல்வேறு கடினமான நடன அசைவுகளை மிக எளிதாக பயிற்றுவிக்கும் ஜெகதீஸ்வரியால் பல நடன ஆசிரியர்கள் உருவாகியுள்ளனர்.

இலங்கையிலிருந்து வந்த அகதி என்ற பிம்பத்தை தகர்த்தெறிந்து, பல்வேறு சவால்களை துணிச்சலுடன் எதிர்கொண்டால் சாதிக்க முடியும் என்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டாக திகழ்கிறார் பரத நடன ஆசிரியை ஜெகதீஸ்வரி சசிதரன்.

Tags: womens dayA shining dance star in India!நாட்டிய தாரகைஜெகதீஸ்வரி சசிதரன்இலங்கை
ShareTweetSendShare
Previous Post

மும்மொழி கொள்கை கையெழுத்து இயக்கத்திற்கு பெருகும் ஆதரவு : மூன்று நாளில் 3 லட்சம் பேர் ஆதரவு!

Next Post

முடிதிருத்தும் தொழிலில் சாதித்த பெண்மணி!

Related News

புதிய உச்சத்தில் நட்புறவு : இந்திய ஏற்றுமதிக்கு ரஷ்யா க்ரீன் சிக்னல் – சிறப்பு கட்டுரை!

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

உதகை – மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்!

தர்மஸ்தலா விவகாரத்தை வழிநடத்தியது யார்? – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி!

வாலஜாபேட்டை அருகே பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies