பரதத்தில் ஜொலிக்கும் நாட்டிய தாரகை!
Oct 9, 2025, 12:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பரதத்தில் ஜொலிக்கும் நாட்டிய தாரகை!

Web Desk by Web Desk
Mar 8, 2025, 08:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இலங்கையிலிருந்து அகதியாக தமிழகத்திற்குள் நுழைந்து தன் அசாத்திய திறமையால் நூற்றுக்கும் அதிகமான மாணவிகளுக்கு பரத நாட்டியம் கற்றுத் தரும் ஆசிரியையாக மாறியிருக்கிறார் ஜெகதீஸ்வரி சசிதரன். மகளிர் தினத்தை கொண்டாடும் இவ்வேளையில் ஜெகதீஸ்வரி சசிதரனின் சவால்கள் மிக்க வாழ்க்கைப் பயணத்தை சிறு செய்தித் தொகுப்பாக பார்க்கலாம்.

1990 களில் இலங்கையில் நடைபெற்ற போரில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள தமிழகத்திற்கு அகதிகளாக வந்த பல்லாயிரக்கணக்கானோர்களில் ஒருவர் தான் இந்த ஜெகதீஸ்வரி சசிதரன். 7 மாத குழந்தையாக தமிழகத்திற்கு வந்த ஜெகதீஸ்வரி, தற்போது நாட்டியத்தில் சாதிக்கத் துடிக்கும் ஏராளமான மாணவர்களின் வழிகாட்டியாக திகழ்கிறார்.

நடனம் மீது சிறுவயது முதலே மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த ஜெகதீஸ்வரி, சினிமாத்துறைக்குள் கால் பதிக்க வேண்டும் என்ற ஆசையில் நடனக் கலையை தீவிரமாக பயிலத் தொடங்கினார். நடனத்திலிருந்த ஆர்வம் படிப்படியாக பரதநாட்டியத்தின் பக்கம் திரும்பியது. இலங்கையைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக பரதநாட்டியத்தை கற்க பல்வேறு சவால்களை எதிர்கொண்ட ஜெகதீஸ்வரி, பின்னாளில் அதில் தனித்துவமிக்கவராகவும் திகழத் தொடங்கினார்.

மிகப்பெரிய போராட்டத்திற்கு பின் இசைக்கல்லூரியில் சேர்ந்த ஜெகதீஸ்வரி, பரதக் கலையை பயின்றி சிறந்த மாணவியாக தேர்ச்சி பெற்றதோடு, பகுதிநேர ஆசிரியராகவும் பணியாற்றத் தொடங்கினார். 2010 ஆம் ஆண்டு முதல் பல்வேறு மேடைகளில் பரத நாட்டியத்தை ஆடி, தனது நடன அசைவால் அனைவரின் கவனத்தையும் தன்பக்கம் திருப்பிய ஜெகதீஸ்வரி, தற்போது தவிர்க்க முடியாத பரதநாட்டிய கலைஞராக திகழ்ந்து வருகிறார்.

பரதக் கலையை கற்க தான் சந்தித்த இடையூறுகளை பிறர் சந்தித்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த ஜெகதீஸ்வரி, ஏற்றத்தாழ்வின்றி ஏழை மாணவர்கள் பலருக்கு தான் கற்ற பரதக் கலையை பயிற்றுவித்து வருகிறார்.

ஜெகதீஸ்வரி சசிதரனின் கலைத்திறனை பாராட்டி நூற்றுக்கணக்கான விருதுகள் பல்வேறு சமூக அமைப்புகளின் மூலமாக வழங்கப்பட்டுள்ளன. பல்வேறு கடினமான நடன அசைவுகளை மிக எளிதாக பயிற்றுவிக்கும் ஜெகதீஸ்வரியால் பல நடன ஆசிரியர்கள் உருவாகியுள்ளனர்.

இலங்கையிலிருந்து வந்த அகதி என்ற பிம்பத்தை தகர்த்தெறிந்து, பல்வேறு சவால்களை துணிச்சலுடன் எதிர்கொண்டால் சாதிக்க முடியும் என்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டாக திகழ்கிறார் பரத நடன ஆசிரியை ஜெகதீஸ்வரி சசிதரன்.

Tags: womens dayA shining dance star in India!நாட்டிய தாரகைஜெகதீஸ்வரி சசிதரன்இலங்கை
ShareTweetSendShare
Previous Post

மும்மொழி கொள்கை கையெழுத்து இயக்கத்திற்கு பெருகும் ஆதரவு : மூன்று நாளில் 3 லட்சம் பேர் ஆதரவு!

Next Post

முடிதிருத்தும் தொழிலில் சாதித்த பெண்மணி!

Related News

ராமநாதபுரம் : வரலாற்றுச் சிறப்புமிக்க திருமலை சேதுபதி கல்வெட்டு கண்டெடுப்பு!

சென்னை : மின்னல் வேகத்தில் தறிகெட்டு ஓடிய கார் – வடமாநில தொழிலாளி பலி!

வேலூர் : திமுகவினருக்கு மட்டுமே தொகுப்பு வீடுகள் ஒதுக்கீடு – கிராம மக்கள் குற்றச்சாட்டு!

மூதாட்டியின் உடல் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானம்!

நீலகிரி : ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் எருமைப்பால் மதிப்பு கூட்டு மையம் திறப்பு!

மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து அருந்திய குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் – மருந்து நிறுவன உரிமையாளர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

நடிகர் துல்கர் சல்மான் அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை – கைப்பற்றப்பட்ட ஆவணங்கள்!

15 வயதுக்கு உட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை – டென்மார்க்

என் வாழ்வில் தனஸ்ரீயின் அத்தியாயம் முடிந்துவிட்டது – சாஹல்

விமானத்தில் பயணித்த முதியவர் உயிரிழப்பு!

டி20-ல் தனக்கான இடத்தை சுப்மன் கில் சம்பாதிக்க வேண்டும் – ராபின் உத்தப்பா

ரூ.8,576 கோடி இழப்பீடு வழங்க ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு ஆணை!

திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி. விவரம் இல்லாமல் பொருட்கள் விற்பனை செய்தால் ரூ.1 லட்சம் அபராதம் – புதுச்சேரி அரசு எச்சரிக்கை!

கிரிப்டோ கரன்சிகள் திருட்டில் வடகொரிய ஹேக்கர்கள் சாதனை!

ஆஸ்திரேலியா சென்றுள்ள ராஜ்நாத் சிங்கிற்கு, பழங்குடியின மக்கள் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு!

ட்ரம்புக்கு பதிலடி கொடுத்த கிரெட்டா தன்பெர்க்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies