மவுசு இழக்கும் உலக்கை உற்பத்தி தொழில் : கைகொடுக்குமா தமிழக அரசு?
Jun 17, 2025, 10:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மவுசு இழக்கும் உலக்கை உற்பத்தி தொழில் : கைகொடுக்குமா தமிழக அரசு?

Web Desk by Web Desk
Apr 16, 2025, 07:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக மக்களின் ஒவ்வொரு இல்லங்களிலும் தவிர்க்க முடியாத பொருளாக இருந்த உலக்கை தற்போது அங்கொன்றும், இங்கொன்றுமாக காட்சிப் பொருளாக மாறியிருக்கிறது. உலக்கைத் தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் தொழிலாளர்களைப் பாதுகாக்கத் தமிழக அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.

சேலம் மாநகரம் கிச்சிப்பாளையத்தில் அமைந்துள்ள மூவேந்தர் நகரில் வசிக்கும் பெரும்பாலான மக்களின் பிரதான தொழிலாக அமைந்திருக்கிறது இந்த உலக்கை தயாரிக்கும் தொழில். மூன்று தலைமுறையாக, பரம்பரை பரம்பரையாக உலக்கை தயாரிக்கும் தொழிலாளர்கள் நிரம்பி வழியும் தெருவாகக் காட்சியளிப்பதால் இத்தெருவின் பெயரே உலக்கை தெரு என மாற்றப்பட்டுள்ளது.

கருவேல், வேங்கை, சிலை மரம், செலவகை, நாட்டுக் கருவேலமரம் என பல்வேறு விதமான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் உலக்கைக்குப் பொதுமக்கள் மத்தியில் தனி வரவேற்பு இருந்து வந்தது.

தஞ்சாவூர், திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து மரங்கள் வரவழைக்கப்பட்டு, அதன் உறுதித் தன்மையைப் பலமுறை ஆய்வு செய்து, மெருகேற்றிய பின்னரே இந்த உலக்கைகள் விற்பனைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. காலப்போக்கில் மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட நவீன அரவை இயந்திரங்களின் வருகையால் உலக்கைகளின் பயன்பாடு அடியோடு சரியத் தொடங்கியிருக்கிறது.

தமிழகம் முழுவதும் நடைபெறும் பிரசித்தி பெற்ற திருக்கோவில் திருவிழாக்களில் விற்பனைக்காக எடுத்துச் செல்லப்பட்டும் இந்த உலக்கைகளை விரும்பி வாங்கிச் செல்வோரின் எண்ணிக்கையும் படிப்படியாகக் குறைந்து வருகிறது.

திருமண விழாக்களின் போதும் இறப்பு வீடுகளில் சம்பிரதாய நடவடிக்கைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் பொருளாக உலக்கை மாறிவிட்டதாகவும் தயாரிப்பாளர்கள் மிகுந்த வேதனை தெரிவிக்கின்றனர்.

தமிழர்களின் பண்டைய கால வாழ்க்கை முறைக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் இந்த உலக்கை தயாரிப்பு தொழிலைப் பாதுகாக்க, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படுவதைப் போல வங்கிக்கடன், சலுகை விலையில் தொழிலுக்குத் தேவையான மூலப்பொருட்கள் ஆகியவற்றை வழங்கத் தமிழக அரசு முன்வர வேண்டும் என்று உலக்கை தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Tn newsTamil Janam newsதமிழக அரசுThe mouse-losing plunger manufacturing industry: Will the Tamil Nadu government help?உலக்கை உற்பத்தி தொழில்
ShareTweetSendShare
Previous Post

அரசுப் பணியாளர்கள் இனி தமிழில் மட்டுமே கையெழுத்திட வேண்டும் : தமிழக அரசு உத்தரவு

Next Post

இண்டி கூட்டணி என்பது காங்கிரஸ் தலைமையிலான ஊழல் குழு : அண்ணாமலை விமர்சனம்!

Related News

குன்னூர் மார்க்கெட்டில் 872 கடைகளை காலி செய்யுமாறு நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் – மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம்!

கோவையில் காவல்துறையினரை கண்டித்து இந்து மக்கள் கட்சி ஆர்பாட்டம்!

TNPSC குரூப்-1 தேர்வில் இந்தி எதிர்ப்பு தொடர்பான கேள்வி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

மதுரை முருக பக்தர்கள் மாநாடு திடலில் அறுபடை வீடுகள் கண்காட்சி – அமைச்சர் நமச்சிவாயம் திறந்து வைத்தார்!

12-ஆவது உலக தமிழ் பொருளாதார மாநாடு : இணையதளம் மற்றும் சிற்றேடு வெளியீட்டு விழா!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அசைவு உணவு சாப்பிட்ட விவகாரம் – பாஜக ஆர்பாட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

எரிபொருள் விநியோக தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை – மத்திய அமைச்சர் ஹர்தீப் பூரி தகவல்!

குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் இறுதிச்சடங்கு – உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் அஞ்சலி!

திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? – நடிகர் சல்மான்கான் விளக்கம்!

கேரளாவில் ஆற்றை கடக்க முடியாமல் தவிக்கும் காட்டு யானைகள்!

ரீல்ஸ் மோகம் – விஷப் பாம்புக்கு முத்தமிட முயன்றவர் மருத்துவமனையில் அனுமதி!

சைப்ரஸ் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு கனடா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

மதிமுக அலுவலகம் மீது மர்ம நபர் தாக்குதல்!

தஞ்சையில் விவசாயிகள் கைது – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

சிறுவன் கடத்தல் வழக்கு – ஏடிஜிபி ஜெயராம் கைது!

வளைகுடா நாடுகள் ஒன்றிணைந்து அமெரிக்காவிடம் பேசி போர் நிறுத்தம் செய்ய இஸ்ரேலை வலியுறுத்த வேண்டும் – ஈரான் விருப்பம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies