நாட்டிற்கு எது அவசியமோ, அதை கட்டாயம் செய்தே ஆக வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர் சுரேஷ் பையாஜி ஜோஷி தெரிவித்துள்ளார்.
மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பை பல்வேறு தரப்பினர் வரவேற்றுள்ளனர். இந்த நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து கருத்து தெரிவித்த ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர் சுரேஷ் பையாஜி ஜோஷி, நாட்டிற்கு எது அவசியமோ, அதை கட்டாயம் செய்தே ஆக வேண்டும் என்றார்.
மக்கள் தொகை கணக்கெடுப்பின் தேதி அரசாங்கத்தால் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.