இமயமலையில் மட்டுமே வளரும் மருத்துவ காளான் - கோவையில் தயாரித்து சாதனை!
Jun 17, 2025, 04:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இமயமலையில் மட்டுமே வளரும் மருத்துவ காளான் – கோவையில் தயாரித்து சாதனை!

Web Desk by Web Desk
Jun 13, 2025, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இமயமலையில் மட்டுமே வளரும் மருத்துவக் குணமிக்க கார்டிசெப்ஸ் காளான் வகைகளைக் கோவையில் தயாரித்து இரண்டு பேராசிரியர்கள் சாதனை படைத்துள்ளனர். மத்திய அரசின் நிதியுதவியோடு தயாரிக்கப்பட்ட மருத்துவ குணமிக்க காளான் வகைகள் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் உந்துசக்தியாக அமைந்துள்ளன.

காளான் என்பது இயற்கையாக மண்ணின் மீது வளரும் ஒரு பூஞ்சை தாவர வகையாகும். உலக அளவில் 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வகையிலான காளான் வகைகள் காணப்படும் நிலையில் அதில் 2 ஆயிரம் வகை காளான்கள் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு நல்ல வருமானத்தையும், மனித உடலுக்கு முழுமையான சத்துக்களையும் வழங்குவதோடு மருத்துவத்துறையில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. அப்படிப்பட்ட மருத்துவக் குணம் நிறைந்த காளான்களில் ஒன்று தான் இந்த கார்டிசெப்ஸ் வகை காளான்.

இமயமலையின் உயரமான பகுதிகளில் உள்ள அந்துப்பூச்சி, கம்பளிப்பூச்சிகளில் மட்டுமே ஒட்டுண்ணியாக வளரும் இந்த கார்டிசெப்ஸ் காளான்களின் மருத்துவப் பயன்பாடு, அவற்றைச் சர்வதேச அளவில் பெரிய  அளவில் பிரபலப்படுத்தியுள்ளது.  அத்தகைய சிறப்புமிக்க காளான் வகைகளை தற்போது கோவையிலும் கிடைக்கும் வகையில் தனியார் கல்லூரியில் பணியாற்றும் இரண்டு பேராசிரியர்கள் இணைந்து இந்த கார்டிசெப்ஸ் காளான் உற்பத்தி மையத்தினை அமைத்துள்ளனர்.

மத்திய அரசின் மூலம் கிடைத்த நிதியுதவியைப் பயன்படுத்தி இம்மலைப்பகுதியில் கிடைக்கும் காளான்களின் மூலக்கூறுகளைச் செயற்கையாகத் தயாரித்து கார்டிசெப்ஸ் காளான் வகைகளை வளர்க்கும் முறை வர்த்தக ரீதியிலும் வெற்றி அடைந்துள்ளது.  பிரத்யேக குளிர் அறையை ஏற்படுத்தி அதில் செயற்கை முறையில் உருவாக்கப்படும் இவ்வகை காளான்கள் பவுடர் வடிவில் மாற்றப்பட்டு தேநீர் மற்றும் சூப்பில் கலந்து அருந்துவதற்கு ஏற்றவகையில் தயாரிக்கப்படுகின்றன. சோர்வு மற்றும் பலவீனத்தைப் போக்கி உடல் ஆற்றலை அதிகரிக்க உதவும் இந்த காளான் உற்பத்தி மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சர்க்கரை அளவை சீராகப் பராமரிப்பதற்கும், உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இதயத்தைப் பாதுகாப்பதற்கும் சிறந்த அருமருந்தாகத் திகழும் கார்டிசெப்ஸ் வகை காளான்கள், காசநோய், நரம்புக் கோளாறு, நீரழிவு நோய் உள்ளிட்டவைகளுக்கு சிறந்த மருந்தாகவும் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் இந்த காளான் வளர்ப்பு முயற்சி கிராமப்புற பெண்கள் மற்றும் சுய உதவிக் குழுக்களுக்கும் எதிர்காலத்தில் சிறந்த தொழிலாக மாறும் சூழல் உருவாகியுள்ளது..

Tags: கோவைA medicinal mushroom that grows only in the Himalayas - a breakthrough made in Coimbatoreஇமயமலையில் மட்டுமே வளரும் மருத்துவ காளான்மருத்துவ காளான்
ShareTweetSendShare
Previous Post

மனைவியை கொல்ல சதி : துபாயில் இருந்து கூலிப்படை மூலம் தீர்த்துக்கட்ட முயற்சி!

Next Post

நாட்டை உலுக்கிய விமான விபத்து : இரட்டை எஞ்சின்கள் செயலிழப்பு காரணம்?

Related News

ஈரான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் : பற்றி எரியும் நகரங்கள், பதுங்கு குழியில் மக்கள் – வெடிக்குமா அணுஆயுத போர்?

தொடர் மழை – 130 அடியை தாண்டிய காரையார் அணை நீர்மட்டம்!

இஸ்ரேல்-ஈரான் போர் : பின்னணியில் அமெரிக்கா?

கள்ளக்குறிச்சியில் தடையை மீறி விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் வேல் யாத்திரை!

அரசு மதுபானக்கடைக்கு எதிரான போராட்டத்தை குற்றச்செயலாக கருத முடியாது – உயர் நீதிமன்றம்

சிறுவனை கடத்தியது தொடர்பான வழக்கு – பூவை ஜெகன்மூர்த்தி நீதிமன்றத்தில் ஆஜர்!

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்ரேலின் சதுரங்க ஆட்டம் – திருப்பியடிக்கும் ஈரான் : மேற்கு ஆசியாவின் எதிர்காலம் என்ன?

சிந்து நதி நீரை ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு திருப்பி விடும் திட்டம் – மத்திய அரசு ஆலோசனை!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கொட்டும் மழையில் தரிசனம் செய்த பக்தர்கள்!

ஆட்சியின் சாதனைகளை கூற முடியாத திமுக மக்களை குழப்ப முயற்சிக்கிறது – அண்ணாமலை

தஞ்சையில் முதல்வருக்கு கறுப்பு கொடி காட்ட முயன்ற விவசாயிகள் கைது- அண்ணாமலை கண்டனம்!

வாணியம்பாடி அருகே மணல் கடத்தலை தடுத்த குடும்பத்தினரை மருத்துவமனை வளாகத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்!

திருப்பரங்குன்றத்தில் அரசு பள்ளி வளாகத்திற்குள் புகுந்த கழிவு நீர் – சாலையில் அமர வைக்கப்பட்ட மாணவர்கள்!

பாமக-வில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் திமுக-வின் சூழ்ச்சி எடுபடாது – அன்புமணி ராமதாஸ்

மக்கள் தொகை கணக்கெடுப்பு – அரசிதழில் வெளியீடு!

வாழப்பாடி அருகே தனியார் பள்ளி பங்குதாரர்கள் இடையே மோதல் – மாணவர்களின் கல்வி கேள்விக்குறி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies