காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூரில், 129 சவரன் நகை, 2 கிலோ வெள்ளி, 21 லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராகவேந்திரா நகரைச் சேர்ந்த முத்துப்பெருமாள் என்பவர் வீட்டில் கடந்த மாதம் அரங்கேறிய கொள்ளை சம்பவம் தொடர்பாகத் தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
செட்டிப்பேடு பகுதியில் வாகன சோதனையின்போது நகை மற்றும் பணத்துடன் பிடிபட்ட இருவரிடம் விசாரணை நடத்தியதில், அவை முத்துபெருமாள் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டவை என்பது உறுதியானது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், நகை, பணம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.