எப்போது இனிக்கும் வாழ்க்கை? : கசப்புடன் காத்திருக்கும் கரும்பு விவசாயிகள்!
Jun 20, 2025, 08:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

எப்போது இனிக்கும் வாழ்க்கை? : கசப்புடன் காத்திருக்கும் கரும்பு விவசாயிகள்!

Web Desk by Web Desk
Jun 20, 2025, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை அருகே கரும்பு விவசாயிகள்  930 நாட்களைக் கடந்தும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் இந்த தீவிரப்போராட்டத்தின் முழுப் பின்னணிதான் என்ன? பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்…

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது தமிழக அரசுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில்,  திருஆரூரான் சர்க்கரை ஆலையால் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகள் கருப்பு கொடி காட்டினர். இதையடுத்து போலீசார் அந்த விவசாயிகளைக் கைது செய்தனர்.

திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயிகளுக்கு சுமார் 212  கோடி ரூபாய் நிலுவைத் தொகை வழங்க வேண்டி உள்ளது. சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த சர்க்கரை ஆலை மூடப்பட்டது. விவசாயிகள் ஏமாற்றப்படுவதைத் தடுக்க தனியார்  சர்க்கரை ஆலையை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. தற்போது சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு  சுமார் 2000 கோடி மதிப்புள்ள திரு ஆரூரான் சர்க்கரை ஆலை மற்றும் அது தொடர்புடைய சொத்துக்களை கால்ஸ் டிஸ்டிலரீஸ் நிறுவனம் வெறும் 147 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.  ஆனால்  அதன்பிறகும் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்கவில்லை என்ற குமுறல் எழுந்துள்ளது.

இதற்கிடையே கரும்பு விவசாயிகள் பெயரில் ஆலை நிர்வாகம் வங்கிகளில் 300 கோடி ரூபாய் கடன் வாங்கி திருப்பி செலுத்தாத நிலையில் வாங்காத கடனுக்கு விவசாயிகள் சிவில் பிரச்சனையில் சிக்கித் தவிக்கிறார்கள்.

தங்களுக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை வழங்கக் கோரியும் தங்கள் பெயரில் வாங்கிய கடனை சம்பந்தப்பட்ட நிறுவனம் வட்டியுடன் செலுத்துமாறும் வலியுறுத்தி விவசாயிகள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதையொட்டி  பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகள் 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30-ஆம் தேதியிலிருந்து திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை அருகே தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் வருகையின் போது கருப்பு கொடி காட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும்  கரும்பு விவசாயிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. தமிழக அரசு துரித நடவடிக்கை எடுத்து தமது வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக இருக்கிறது.

Tags: When will life be sweet? : Sugarcane farmers are waiting with bitterness!கரும்பு விவசாயிகள்கசப்புடன் காத்திருக்கும் விவசாயிகள்
ShareTweetSendShare
Previous Post

குப்பைக் கிடங்காக மாறும் வ.உ.சி சந்தை!

Next Post

பல ஆயிரம் கோடி வீண் : நத்தை வேகத்தில் மழைநீர் வடிகால் பணி – பொதுமக்கள் அவதி!

Related News

தண்ணீர் லாரியால் கலைந்த கனவு : அலட்சியத்தால் பறிபோன உயிர்!

வாழத் தகுதியற்றதா வடசென்னை?

தொடரும் விபத்துகளால் அதிர்ச்சி : ஆமை வேகத்தில் மழைநீர் வடிகால் பணி!

பூச்சிகளின் ஆச்சரியங்கள்!

பல ஆயிரம் கோடி வீண் : நத்தை வேகத்தில் மழைநீர் வடிகால் பணி – பொதுமக்கள் அவதி!

குப்பைக் கிடங்காக மாறும் வ.உ.சி சந்தை!

Load More

அண்மைச் செய்திகள்

எப்போது இனிக்கும் வாழ்க்கை? : கசப்புடன் காத்திருக்கும் கரும்பு விவசாயிகள்!

நான்காண்டு காலமாக, அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கும் திமுக : அண்ணாமலை விமர்சனம்!

பட்டியலின மக்கள் மீதான வன்முறைகள் திமுக ஆட்சியில் தான் கொடூர உச்சங்களைத் தொட்டிருக்கிறது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டோரின் அடையாளங்களை வெளியிடக் கூடாது : தமிழக காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

திண்டுக்கல் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – இந்து முன்னணி நிர்வாகிகளிடையே கைகலப்பு!

ஆப்ரேஷன் சிந்தூரை நிறுத்தும்படி இந்தியாவிடம் கெஞ்சிய பாகிஸ்தான் : துணை பிரதமர் இஷாக் தார் வாக்குமூலம்!

தேசிய ஜனநாயக கூட்டணியின் இரட்டை இன்ஜின் அரசாங்கம் பீகாரில் செயல்படுகிறது : பிரதமர் மோடி பெருமிதம்!

சென்னை போக்குவரத்து காவல்துறையினர் போல் செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பி மோசடி!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஜூலை மாதம் 18ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

புதிய இருசக்கர வாகனங்களுடன் 2 ஹெல்மெட் வழங்க உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies