பற்றி எரியும் குப்பை கிடங்கு : சுவாசக்கோளாறால் மூச்சு திணறும் மக்கள்!
Aug 24, 2025, 06:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பற்றி எரியும் குப்பை கிடங்கு : சுவாசக்கோளாறால் மூச்சு திணறும் மக்கள்!

Web Desk by Web Desk
Jul 21, 2025, 07:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருநெல்வேலிக் குப்பைக் கிடங்கில் கடந்த நான்கு நாட்களாகப் பற்றி எரியும் தீயில் இருந்து பரவும் கரும்புகையால் மூச்சுத்திணறல், சுவாசக்கோளாறு பிரச்சனைகளால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் தொடர்கதையாகி வரும் இந்த தீ விபத்திற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட 55 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் மற்றும் கழிவுகள் ராமையன்பட்டி அரசுக் குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. நாள் தோறும் 180 முதல் 200 டன் குப்பைகள் கொட்டப்படும் குப்பைக் கிடங்கில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பாக எதிர்பாராத விதமாகத் தீப்பற்றி எரியத் தொடங்கியது.

காற்றின் வேகமும் அதிகமாக இருந்ததால் குப்பைக் கிடங்கு முழுவதும் தீ பரவி வானை முட்டும் அளவிற்கு கரும்புகை சூழ்ந்தது. குப்பைக் கிடங்கிற்கு அருகில் உள்ள ராமையன்பட்டி, தச்சநல்லூர், மானூர் ரஸ்தா ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கும் கரும்புகை சூழ்ந்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

பாளையங்கோட்டை ஜங்சன், டவுன் மற்றும் பேட்டை ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் இரவு பகலாக ஈடுபட்டனர். காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் குப்பைக் கிடங்கில் பரவும் தீயை முழுமையாகக் கட்டுப்படுவதில் சிக்கல் எழுந்துள்ளது. குடியிருப்புகளைச் சூழ்ந்திருக்கும் புகை மூட்டத்தால் சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை மூச்சு விடுவதற்கே சிரமப்படும் சூழல் உருவாகியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற தீ விபத்தும், அதன் மூலம் ஏற்படும் பாதிப்பும் தொடர்கதையாகி வரும் நிலையில், தீயை உடனுக்குடன் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தேவையான தீயணைப்பு சாதனங்கள் இல்லை என்பதும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குப்பைக் கிடங்கில் தீ பரவாத வகையில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையைப் பலமுறை விடுத்தும் மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

நாள்தோறும் பரவும் புகை மூட்டத்தால் மூச்சுத்திணறல், சுவாசக் கோளாறு, நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனை என பல்வேறு நோய்களுக்கு உள்ளாகும் மக்கள் தங்களைக் கருணைக் கொலை செய்துவிடுங்கள் என்று சொல்லும் அளவிற்குத் தள்ளப்பட்டுள்ளனர். பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம்பிரிப்பதோடு, இதுபோன்ற தீ விபத்துக் காலங்களில் அவற்றை உடனடியாக அணைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: டவுன்திருநெல்வேலிBurning garbage dump: People suffocating due to respiratory problemsமூச்சு திணறும் மக்கள்எரியும் குப்பை கிடங்குபாளையங்கோட்டை ஜங்சன்
ShareTweetSendShare
Previous Post

வேதனையில் ஏழை மாணவிகள் : மூடப்படும் தெரசா மகளிர் கிளை ஆராய்ச்சி மையம்!

Next Post

80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் அண்டார்டிகாவில் ஓடிய நதி – ஆய்வில் புதிய தகவல்!

Related News

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

உதகை – மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்!

தர்மஸ்தலா விவகாரத்தை வழிநடத்தியது யார்? – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி!

வாலஜாபேட்டை அருகே பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து!

தர்மஸ்தலா உடல்கள் புதைப்பு விவகாரம் – புகார் அளித்தவரை கைது செய்தது விசாரணைக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies