வெள்ள பாதிப்பால் பரிதவிக்கும் பஞ்சாப் - தீவுகளான நகரங்கள்!
Feb 4, 2026, 12:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

வெள்ள பாதிப்பால் பரிதவிக்கும் பஞ்சாப் – தீவுகளான நகரங்கள்!

Murugesan M by Murugesan M
Aug 30, 2025, 07:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தொடர்  கனழை, வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கைச் சீற்றங்களால் பஞ்சாப் மாநிலமே ஸ்தம்பித்துள்ளது. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர். இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

எங்கு பார்த்தாலும் வெள்ளம். சாலைகள், வயல்வெளிகள், குருத்துவாராக்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் என அனைத்து இடங்களிலும் வெள்ளம். இன்றைய தேதிக்குப் படகுகள் மூலம் மட்டும்தான் பஞ்சாப்பில் பயணிக்க முடியும் எனக் கூறும் அளவுக்கு ஒட்டுமொத்த மாநிலமே வெள்ளக்காடாகியுள்ளது.

1988ஆம் ஆண்டுக்குப் பிறகு மிக மோசமான வெள்ளப் பாதிப்பை சந்தித்துள்ளது பஞ்சாப். இமாச்சலப் பிரதேசம், ஜம்மு & காஷ்மீர்ப் பகுதிகளில் பெய்த கனமழையால் சட்லஜ், பியாஸ், ரவி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளம்தான் தற்போது பஞ்சாப்பையே நிலைகுலைய வைத்துள்ளது.

குறிப்பாக, பதன்கோட், குர்தாஸ்பூர், ஃபாசில்கா, கபுர்தலா, டர்ன் தரன், ஃபெரோஸ்பூர், ஹோஷியார்பூர், அமிர்தசரஸ் ஆகிய பகுதிகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. 518 கிராமங்கள் முழுவதுமாக வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பல பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் படகுகள் மூலவும், ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர்.

பஞ்சாப் விவசாயத்தை நம்பியுள்ள மாநிலம். ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளம் வயல்வெளிகளைக் காணாமல் போகசெய்யும் அளவுக்கு மூழ்கடித்துள்ளது. தங்கள் கண் முன்னால், வயல்வெளிகள் நீரில் மூழ்குவதை பார்த்து விவசாயிகள் கண்ணீர் வடிக்கும் காட்சிகள் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.

பஞ்சாபில் கடந்த 24 மணிநேரத்தில் 243 சதவீதம் அதிக மழைப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, ரவி நதியின் மூன்று இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் வேகமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப்-க்கு பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். மத்திய மற்றும் மாநில அரசுகளும் முழுவீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.

Tags: floodpunjapPunjab suffers from flood damage - cities that are islandsவெள்ள பாதிப்பால் பரிதவிக்கும் பஞ்சாப்
ShareTweetSendShare
Previous Post

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் – இபிஎஸ் கேள்வி!

Next Post

இந்திய மருந்துகள் முன் அடிபணிந்த அதிபர் டிரம்ப் : சுங்க வரியில் இருந்து விலக்கு அளித்த பின்னணி!

Related News

புதுச்சேரியில் “SAGA OF RSS” கருத்தரங்கம் – தத்தாத்ரேய ஹோசபாளே பங்கேற்பு!

ஒடிசாவில் நடைபெற்ற ராம்ஜெட் என்ஜின் ஏவுகணை சோதனை வெற்றி -நீண்ட தூர போர் விமானங்களை துல்லியமாகத் தாக்க முடியும்!

இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து எதிர்கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகின்றன – பியூஷ் கோயல்

மணிப்பூர் பாஜக எம்.எல்.ஏ-க்கள் குழு தலைவராக யெம்நம் கெம்சந்த் சிங் தேர்வு – விரைவில் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளதாக தகவல்!

மும்பை விமான நிலையத்தில் இரு விமானங்களின் இறக்கைகள் உரசி விபத்து – பயணிகள் பத்திரமாக மீட்பு!

தேச பாதுகாப்புக்கு முன்னுரிமை- இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு : அச்சத்தில் பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

காங்கிரஸை அழைக்காத திமுக – விசிக, இடதுசாரிகளுடன் தனியாக கூட்டணி பேச்சுவார்த்தை!

வழக்கில் இருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சொத்துகளை மீட்க அகில இந்திய தலைமை முடிவு!

பாதுகாப்பு எல்லைப்பகுதியை முன்னறிவிப்புமின்றி கையக்கப்படுத்திய திமுக பிராந்திய அரசு!

ஹெச்.ராஜாவின் உடல்நிலை முன்னேற்றம் – நயினார் நாகேந்திரன் உடன் சிரித்து உரையாடிய வீடியோவை வெளியிட்டது பாஜக!

தடையற்ற மின்சாரம் வழங்கப்படும் என்ற வாக்குறுதி  என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன்

சேலம் ஜருகுமலை பகுதிகளில் காட்டுத்தீ – மலையடிவார மக்கள் அச்சம்!

மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு வழக்கு – தற்காலிக ஊழியர்கள் இருவரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி!

மதுரை மாமன்றக் கூட்டம் வரும் 10-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

இந்தியா ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம் : பாகிஸ்தான் வங்கதேச வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies