வேதனையில் வாடும் விவசாயிகள் : அழிவை நோக்கி வெற்றிலை விவசாயம்!
Oct 9, 2025, 09:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வேதனையில் வாடும் விவசாயிகள் : அழிவை நோக்கி வெற்றிலை விவசாயம்!

Web Desk by Web Desk
Sep 2, 2025, 07:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாமக்கல்லில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகத் திமுக வழங்கிய வாக்குறுதி தற்போது வரை நிறைவேற்றப்படவில்லை என வெற்றிலை விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். அழிவை நோக்கி நகரும் வெற்றிலை விவசாயத்தைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் சிறப்புத் திட்டங்களை அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாமக்கல் அடுத்த பரமத்திவேலூர், பொன்மலர் பாளையம், வெங்கரை, பாண்டமங்கலம், குப்பிச்சிபாளையம் உள்ளிட்ட காவிரி கரையோரப் பகுதிகளில் சுமார் பத்தாயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவில் வெற்றிலைச் சாகுபடி நடைபெற்று வருகிறது.

வெற்றிலைச் சாகுபடியில் ஈடுபட்டும் வரும் விவசாயிகளில் 90 சதவிகிதம் பேர் குத்தகை நிலத்திலேயே சாகுபடி செய்து வரும் நிலையில், இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.

பெரும்பாலான விவசாயிகளின் வாழ்வாதாரமாகத் திகழும் இந்த வெற்றிலை விவசாயத்தை மேம்படுத்தவோ, விவசாயிகளுக்கு உதவவோ தமிழக அரசு எந்ததிட்டத்தையும் அறிவிக்கவில்லை என்பது அப்பகுதி விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த காலங்களில் தமிழகத்திலிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு விற்பனைக்காக வெற்றிலை அனுப்பப்பட்ட நிலையும், படிப்படியாகக் குறைந்து வருவதால் விவசாயிகளின் வருமானமும் பாதிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி ஆட்சிக்கு வந்து நான்காண்டுகள் கடந்தும் நிறைவேற்றாமல் இருப்பதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

அதிக மருத்துவக் குணம் கொண்ட வெற்றிலையில் இருந்து மருந்துகளைத் தயாரிக்க முன்வரவேண்டும் என்பதோடு, அழியும் தருவாயில் உள்ள வெற்றிலை விவசாயத்தைப் பாதுகாக்க மற்ற சாகுபடிக்கு வழங்கப்படுவதைப் போல வெற்றிலைச் சாகுபடிக்கும் கடன் உதவி வழங்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதோடு தேர்தலுக்கு முன்பாகத் திமுக அளித்த வெற்றி ஆராய்ச்சி நிலைய வாக்குறுதி தற்போது வரை நிறைவேற்றப்படாத நிலையில், அதனை உடனடியாக நிறைவேற்ற முன்வர வேண்டும் எனவும் காவிரிக்கரை வெற்றிலை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: tn agricultureFarmers in agony: Betel farming heading for extinctionவேதனையில் வாடும் விவசாயிகள்வெற்றிலை விவசாயம்
ShareTweetSendShare
Previous Post

சீர்காழி அருகே 72 வயதில் டிப்ளமோ படிக்கும் முதியவர்!

Next Post

சாதனைக்கு உயரம் தடையில்லை : செயல்பாடுகளால் உச்சம் தொட்ட பெண் அதிகாரி!

Related News

கும்பகோணம் அருகே மழை நீர் வடியாமல் 300 ஏக்கர் நெல் பயிர்கள் சேதம் – விவசாயிகள் வேதனை!

ஊதிய உயர்வு, தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தல் – தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

தரம் உயர்த்தி கட்டப்பட்ட ஆம்பூர் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை – நோயாளிகள் குற்றச்சாட்டு!

ஆடுதுறை அருக அரசு பள்ளியில் தடுப்புகள் இன்றி கட்டப்பட்ட கழிவறை!

வேலூர் அருகே காட்டாற்று வெள்ளம் – பள்ளிக்கு செல்ல முடியாத மாணவர்கள்!

கரூர் செல்வது தொடர்பாக மாவட்ட எஸ்பியை அணுகலாம் – விஜய்க்கு டிஜிபி அலுவலகம் பதில்!

Load More

அண்மைச் செய்திகள்

மும்பையில் நடிகை ராணி முகர்ஜியின் யாஷ் ராஜ் பிலிம்ஸ் ஸ்டூடியோவை பார்வையிட்ட பிரிட்டன் பிரதமர்!

கொடைக்கானல் மலைப்பகுதியில் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை!

தமிழகத்தை ஊழல் படுகுழியில் தள்ளிய திமுக தலைவரின் பெயரை திணிக்க முயற்சி – அண்ணாமலை கண்டனம்!

சென்னையில் ஆட்டோக்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பிரச்சாரம் – நயினார் நாகேந்திரன் தொடங்கி வைத்தார்!

இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதல் மாநிலம் தமிழகம் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

பிரதமர் மோடியுடன் கெய்ர் ஸ்டார்மர் இன்று சந்திப்பு – முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இஸ்ரேல்- பாலஸ்தீன பிரச்னை : தீர்வை முன்வைக்கும் மோடியின் ராஜ தந்திரத்திற்கு பாராட்டு!

பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி செய்யும் அமெரிக்கா : எதனையும் எதிர்கொள்ள தயாராக இந்தியா!

GOOGLE PAY-க்கு போட்டியாக ZOHO PAY : நிதி சேவை துறையில் கால் பதிக்கும் ஸ்ரீதர் வேம்பு!

Cold Start ட்ரோன் பயிற்சி : வான் போருக்கு தயார் – இந்திய ராணுவ தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies