பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் - ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!
Jan 18, 2026, 07:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

Murugesan M by Murugesan M
Sep 29, 2025, 07:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகில் எல்லா தீவிரவாதத்திற்கும் பின்னணியில் இருப்பது ஒரே நாடு தான் எனப் பாகிஸ்தானை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடுமையாகச் சாடியுள்ளார். ஐ.நா. பொதுக்கூட்டத்தில் ஜெய்சங்கரின் அனல் பறந்த பேச்சை விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.

ஐநா பொது சபையின் 80ஆவது பொதுக்குழு கூட்டம் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. ஐநா உறுப்பு நாடுகள் சார்பாக அதன் தலைவர்களும் பிரதிநிதிகளும் பொது சபையில் உரையாற்றிய வண்ணம் இருக்கின்றனர். இந்தப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்காத நிலையில், இந்தியா சார்பாக மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது எல்லை தாண்டிய பயங்கரவாதம், வரி வர்த்தகம் எனப் பல்வேறு விஷயங்களைக் குறிப்பிட்ட ஜெயசங்கர், பாகிஸ்தானை கடுமையாகச் சாடினார். உலக பயங்கரவாதத்தின் ஒட்டுமொத்த மையமாக இருக்கும் பாகிஸ்தானை அண்டை நாடாகக் கொண்டிருப்பதை எண்ணி வெட்கப்படுவதாகவும், பல தசாப்தங்களாகவே பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடையவர்கள் பாகிஸ்தானை சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர் என்றும் ஆவேசத்துடன் தெரிவித்தார்.

பயங்கரவாதத்தை வேரறுப்பதில் உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என அழைப்பு விடுத்த ஜெய்சங்கர், பயங்கரவாதத்தை கொள்கையாகக் கொண்டிருக்கும் நாடுகளைத் தனிமைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். பயங்கரவாத செயல்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் நிதி உதவி செல்வதை தடுக்க உடனடி நடவடிக்கை தேவை என்றும் கேட்டுக்கொண்டார்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 26 அப்பாவிகள் கொல்லப்பட்ட சம்பவத்தை வேதனையுடன் குறிப்பிட்ட ஜெய்சங்கர், இது போன்ற கோழைத்தனமான நடவடிக்கைகளைப் பாகிஸ்தான் நிறுத்தாவிட்டால், விளைவுகள் வேறுவிதமாக இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

‘ஆப்ரேஷன் சிந்தூர்’ பற்றிக் குறிப்பிட்டு பேசிய ஜெய்சங்கர், அப்பாவி மக்களின் உயிரைப் பறித்த குற்றவாளிகளை இந்தியா நீதியின் முன் நிறுத்தியதாகத் தெரிவித்தார். இறுதியாக ஜெய்சங்கர் தெரிவித்த கருத்துதான், மொத்த ஸ்பீச்சிலும் கூடுதல் கவனம் பெற்றது.

இன்று சில நாடுகள் பயங்கரவாதத்தை ஆதரிக்கலாம்…. ஆனால் அதுவே உங்கள் அழிவுக்கு வழிவகுக்கும் என ஜெய்சங்கர் தெரிவிக்க, ஒட்டுமொத்த அரங்கமும் அப்ளாஸ் கொடுத்து இந்தியாவின் நிலைப்பாட்டை ஆமோதித்தது.

Tags: JaishankarPahalgam attackwho bought Pakistan from the left and right - UN. Heated speech at the General AssemblyIndiapakistan
ShareTweetSendShare
Previous Post

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

Next Post

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

Related News

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவா? தவெகவா? – உச்சகட்ட குழப்பத்தில் காங்கிரஸ்

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

வத்தலகுண்டு அருகே வாழைப்பழம் சூறை எறியும் விழா கோலாகலம்!

30 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் – மலரும் நினைவுகளை பகிர்ந்து ஆனந்தம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies