பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் - ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!
Sep 12, 2026, 12:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

Murugesan M by Murugesan M
Sep 29, 2025, 07:59 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உலகில் எல்லா தீவிரவாதத்திற்கும் பின்னணியில் இருப்பது ஒரே நாடு தான் எனப் பாகிஸ்தானை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடுமையாகச் சாடியுள்ளார். ஐ.நா. பொதுக்கூட்டத்தில் ஜெய்சங்கரின் அனல் பறந்த பேச்சை விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.

ஐநா பொது சபையின் 80ஆவது பொதுக்குழு கூட்டம் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. ஐநா உறுப்பு நாடுகள் சார்பாக அதன் தலைவர்களும் பிரதிநிதிகளும் பொது சபையில் உரையாற்றிய வண்ணம் இருக்கின்றனர். இந்தப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்காத நிலையில், இந்தியா சார்பாக மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது எல்லை தாண்டிய பயங்கரவாதம், வரி வர்த்தகம் எனப் பல்வேறு விஷயங்களைக் குறிப்பிட்ட ஜெயசங்கர், பாகிஸ்தானை கடுமையாகச் சாடினார். உலக பயங்கரவாதத்தின் ஒட்டுமொத்த மையமாக இருக்கும் பாகிஸ்தானை அண்டை நாடாகக் கொண்டிருப்பதை எண்ணி வெட்கப்படுவதாகவும், பல தசாப்தங்களாகவே பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடையவர்கள் பாகிஸ்தானை சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர் என்றும் ஆவேசத்துடன் தெரிவித்தார்.

பயங்கரவாதத்தை வேரறுப்பதில் உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என அழைப்பு விடுத்த ஜெய்சங்கர், பயங்கரவாதத்தை கொள்கையாகக் கொண்டிருக்கும் நாடுகளைத் தனிமைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். பயங்கரவாத செயல்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் நிதி உதவி செல்வதை தடுக்க உடனடி நடவடிக்கை தேவை என்றும் கேட்டுக்கொண்டார்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 26 அப்பாவிகள் கொல்லப்பட்ட சம்பவத்தை வேதனையுடன் குறிப்பிட்ட ஜெய்சங்கர், இது போன்ற கோழைத்தனமான நடவடிக்கைகளைப் பாகிஸ்தான் நிறுத்தாவிட்டால், விளைவுகள் வேறுவிதமாக இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

‘ஆப்ரேஷன் சிந்தூர்’ பற்றிக் குறிப்பிட்டு பேசிய ஜெய்சங்கர், அப்பாவி மக்களின் உயிரைப் பறித்த குற்றவாளிகளை இந்தியா நீதியின் முன் நிறுத்தியதாகத் தெரிவித்தார். இறுதியாக ஜெய்சங்கர் தெரிவித்த கருத்துதான், மொத்த ஸ்பீச்சிலும் கூடுதல் கவனம் பெற்றது.

இன்று சில நாடுகள் பயங்கரவாதத்தை ஆதரிக்கலாம்…. ஆனால் அதுவே உங்கள் அழிவுக்கு வழிவகுக்கும் என ஜெய்சங்கர் தெரிவிக்க, ஒட்டுமொத்த அரங்கமும் அப்ளாஸ் கொடுத்து இந்தியாவின் நிலைப்பாட்டை ஆமோதித்தது.

Tags: who bought Pakistan from the left and right - UN. Heated speech at the General AssemblyIndiapakistanJaishankarPahalgam attack
Share
Tweet
SendShare
Previous Post

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

Next Post

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

இலங்கை நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் ராஜ்நாத்சிங் சாமி தரிசனம்!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்தார் ரஷ்ய அதிபர் புதின் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

5 ஈரான் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா – மீண்டும் உக்கிரமடையும் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் உச்சி மாநாடு : சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies