பிஞ்சு குழந்தைகளின் உயிரை குடித்த "கோல்ட்ரிப்" - தரமற்ற மருந்துக்கு தடை விதித்த தமிழகம், கேரளா!
Oct 9, 2025, 09:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

பிஞ்சு குழந்தைகளின் உயிரை குடித்த “கோல்ட்ரிப்” – தரமற்ற மருந்துக்கு தடை விதித்த தமிழகம், கேரளா!

Web Desk by Web Desk
Oct 6, 2025, 07:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய பிரதேசத்தில், கோல்ட்ரிப் இருமல் மருந்து குடித்து 10 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பூதாகரமான நிலையில், தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களும், தரமற்ற மருந்துக்குத் தடை விதித்துள்ளன. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்…

மத்திய பிரதேசம் மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் கோல்ட்ரிப் இருமல் மருந்து குடித்த 10 குழந்தைகள் சிறுநீரகம் செயலிழந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. குஐராத் மாநிலத்திலும் ஒரு குழந்தை உயிரை விட, இனியொரு சம்பவம் நடந்து விடக் கூடாது எனச் சுகாதாரத்துறை விசாரணையைத் தீவிரப்படுத்தியது.

பெரும்பாலான குழந்தைகள் 7 வயதுக்கு உட்பட்டவர்களாக இருந்ததால், இக்கொடூர சம்பவம் மக்களை கவலையில் ஆழ்த்தியது. குழந்தைகள் அனைவரும், கோல்ட்ரிப் எனும் இருமல் மருந்தைக் குடித்திருப்பது விசாரணையில் தெரியவர, உயிரை குடித்தது அந்த மருந்து தானா? என ஆராயப்பட்டது.

குழந்தைகளின் சிறுநீரக திசுவில் டை எத்திலின் கிளைக்கால் எனப்படும் கொடிய வேதிப்பொருள் இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதால், கோல்ட்ரிப் என்பது இருமல் மருந்து அல்ல, விஷ மருந்து என்பது திட்டவட்டமானது. இந்தச் சம்பவத்தில் மேலும் ஒரு அதிர்ச்சியூட்டும் தகவல் என்னவென்றால்.

கோல்ட்ரிப் மருந்து தமிழகத்தில் தயாரிக்கப்பட்டது தான். காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்ச்சத்திரத்தில் இயங்கும் ஸ்ரீசென் பார்மா நிறுவனத்தில் கோல்ட்ரிப் தயாரிக்கப்பட்டது விசாரணையில் தெரியவர, அந்நிறுவனத்தில் இருந்து விநியோகிக்கப்பட்ட ஒட்டுமொத்த மருந்துகளுக்கும் மத்திய பிரதேச அரசு தடைவிதித்துள்ளது.

அதுமட்டுமல்ல, ஸ்ரீசென் பார்மா நிறுவனத்தின் மீது வழக்குப்பதிந்து உயிரிழந்த குழந்தைகளுக்கு நீதி கேட்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது மத்திய பிரதேச அரசு. மேலும் கோல்ட்ரிப் மருந்தை குழந்தைகளுக்குப் பரிந்துரைத்த மருத்துவரையும் அதிரடியாகக் கைது செய்திருக்கிறது.

பிஞ்சுக் குழந்தைகள் உயிரை விட்ட சம்பவம், நாடு முழுவதும் பூதாகரமான நிலையில், பல்வேறு மாநில அரசுகள் அலர்ட் ஆகி இருக்கின்றன. மத்திய பிரதேசத்தைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் கேரளம் ஆகிய மாநிலங்களும் கோல்ட்ரிப் மருந்துக்கு அதிரடியாகத் தடை விதித்துள்ளன.

மருந்தகங்களில் இருக்கும் கோல்ட்ரிப் ஸ்டாக் அனைத்தும் உடனடியாக அழிக்கப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளன. இதனிடையே, சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருக்கும் குழந்தைகளுக்கு முடிந்த வரையில், சிரப் பயன்படுத்த வேண்டாம் என மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். பெரியவர்களின் சிறுநீரகம் முதிர்ச்சி அடைந்திருக்கும். ஆனால், குழந்தைகளுக்குச் சிறுநீரகம் முழுமையாக முதிர்ச்சி அடைந்திருக்காது என்பதால் மருத்துவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Tags: தரமற்ற மருந்துக்கு தடைKeralaTamil Nadu"Goldtrip" that took the lives of unborn children - Tamil Nadu and Kerala have banned the substandard drug!கோல்ட்ரிப் இருமல் மருந்து
ShareTweetSendShare
Previous Post

கேன்சர் அறிகுறிகளை முன்பே கண்டறியலாம் : அறிமுகமாகும் புதிய ரத்த பரிசோதனை!

Next Post

காசாவில் போர் நிறுத்தம் : வெற்றி பெற்ற ட்ரம்ப் அமைதி திட்டம் – பிரதமர் மோடி பாராட்டு!

Related News

மும்பையில் நடிகை ராணி முகர்ஜியின் யாஷ் ராஜ் பிலிம்ஸ் ஸ்டூடியோவை பார்வையிட்ட பிரிட்டன் பிரதமர்!

கும்பகோணம் அருகே மழை நீர் வடியாமல் 300 ஏக்கர் நெல் பயிர்கள் சேதம் – விவசாயிகள் வேதனை!

ஊதிய உயர்வு, தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தல் – தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

தரம் உயர்த்தி கட்டப்பட்ட ஆம்பூர் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை – நோயாளிகள் குற்றச்சாட்டு!

ஆடுதுறை அருக அரசு பள்ளியில் தடுப்புகள் இன்றி கட்டப்பட்ட கழிவறை!

வேலூர் அருகே காட்டாற்று வெள்ளம் – பள்ளிக்கு செல்ல முடியாத மாணவர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

கொடைக்கானல் மலைப்பகுதியில் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை!

கரூர் செல்வது தொடர்பாக மாவட்ட எஸ்பியை அணுகலாம் – விஜய்க்கு டிஜிபி அலுவலகம் பதில்!

தமிழகத்தை ஊழல் படுகுழியில் தள்ளிய திமுக தலைவரின் பெயரை திணிக்க முயற்சி – அண்ணாமலை கண்டனம்!

சென்னையில் ஆட்டோக்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பிரச்சாரம் – நயினார் நாகேந்திரன் தொடங்கி வைத்தார்!

இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதல் மாநிலம் தமிழகம் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

பிரதமர் மோடியுடன் கெய்ர் ஸ்டார்மர் இன்று சந்திப்பு – முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இஸ்ரேல்- பாலஸ்தீன பிரச்னை : தீர்வை முன்வைக்கும் மோடியின் ராஜ தந்திரத்திற்கு பாராட்டு!

பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி செய்யும் அமெரிக்கா : எதனையும் எதிர்கொள்ள தயாராக இந்தியா!

GOOGLE PAY-க்கு போட்டியாக ZOHO PAY : நிதி சேவை துறையில் கால் பதிக்கும் ஸ்ரீதர் வேம்பு!

Cold Start ட்ரோன் பயிற்சி : வான் போருக்கு தயார் – இந்திய ராணுவ தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies