தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதற்கிடையே கடந்த சில நாட்களாக தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வந்தது.
இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இன்று அதிகாலை 5.30 மணியளவில் வலுப்பெற்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து குறைந்த காற்றழுத்த மண்டலமாக வலுவடையக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இது மேற்கு வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து கடற்பரப்பை விட்டு விலகி செல்லும் எனவும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.