முதலமைச்சர் தொகுதியிலேயே 9,000 போலி வாக்காளர்கள் - நயினார் நாகேந்திரன்
Nov 5, 2025, 11:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முதலமைச்சர் தொகுதியிலேயே 9,000 போலி வாக்காளர்கள் – நயினார் நாகேந்திரன்

Web Desk by Web Desk
Nov 5, 2025, 12:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முதலமைச்சர் ஸ்டாலினின் தொகுதியிலேயே போலி வாக்காளர்கள் ஒன்பதாயிரம் பேர் இருப்பதாகப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள YMCA மைதானத்தில் தமிழக பாஜக தொகுதி அமைப்பாளர்கள், இணை அமைப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் பயிலரங்கு கூட்டம் நடைபெற்றது.

இதில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகள், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இந்தப் பயிலரங்கத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தேர்தல் பொருளாளர் பைஜயந்த் பாண்டா, மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, மூத்த தலைவர்கள் தமிழிசை சௌந்தரராஜன், எச்.ராஜா, பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது பேசிய நயினார் நாகேந்திரன், தமிழகத்தில் 200 தொகுதிகளுக்கு மேல் NDA கூட்டணி வெற்றி பெற தாம் உழைக்க வேண்டும் என்று கூறினார். உதயநிதியை முதலமைச்சராக்கும் முயற்சியில் திமுக கூட்டணி ஈடுபட்டுள்ளதாகவும், முதலமைச்சர் ஸ்டாலினின் தொகுதியிலேயே போலி வாக்காளர்கள் ஒன்பதாயிரம் பேர் இருப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டா, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைச் சீரமைக்கவும், ஊழலை ஒழிக்கவும், மாற்றம் தேவை என்கிற சூழலில் உள்ளதாகக் கூறினார்.

திமுக கூட்டணி இந்த முறை போலி வாக்காளர்களை வைத்துக் கொண்டு 200 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற நினைத்துக் கொண்டிருப்பதாகவும், அதனைச் சாத்தியமற்றதாக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை பேசுகையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் அடுத்து எப்போது நடக்க போகிறது என்று தெரியவில்லை எனவும், அதனால் இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை முறையாக நடைபெறுவதே தமது நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

மேலும், அடுத்த 100 நாட்கள் பாஜக மற்றும் தமிழகத்தில் முக்கியமான நாட்கள் என்றும் தெரிவித்தார்.

Tags: நயினார் நாகேந்திரன்9 thousands fake voters in the Chief Minister's constituency - Nainar Nagendran
ShareTweetSendShare
Previous Post

கங்கைகொண்ட சோழபுர பிரகதீஸ்வரர் கோயில் அன்னாபிஷேக விழா தொடக்கம்!

Next Post

சத்தீஸ்கர் : சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்வு!

Related News

ஐப்பசி மாத பௌர்ணமி – பர்வதமலையில் திரண்ட பக்தர்கள்!

லட்சத்தில் பெற்ற ஊதியத்தை உதறி தள்ளிய பிரதீப் கண்ணன்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா – சுவாமி வாகனங்களுக்கு வர்ணம் தீட்டும் பணி தீவிரம்!

கரூர் விவகாரத்தில் முதலமைச்சர் கூறியது அனைத்தும் வடிகட்டிய பொய் – விஜய் குற்றச்சாட்டு!

திமுகவிற்கு சார் என்றாலும் பயம், S.I.R என்றாலும் பயம் – வினோஜ் பி செல்வம்

பாமக எம்எல்ஏ அருளை கைது செய்யக்கோரி அன்புமணி ஆதரவாளர்கள் முற்றுகை போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

வங்கதேசத்தில் நடந்தது என்ன? : அம்பலமாகும் CIA சதி – துணை போன ராணுவம்!

ரூ.1 லட்சம் கோடி அறிவித்த மோடி : ஆராய்ச்சித் துறையில் கோலோச்சும் இந்தியா!

கோவையில் பாலியல் தாக்குதலுக்குள்ளான மாணவி மீதே பழி சுமத்தும் திமுக கூட்டணி கட்சி தலைவர் – அண்ணாமலை கண்டனம்!

டிஜிபி பதவி உயர்வு பட்டியல் விவகாரம் – தமிழக அரசின் பதிலை ஏற்க யுபிஎஸ்சி மறுப்பு!

ஜாய் கிரிசில்டா உடனான திருமணம் மிரட்டலின் பேரில் நடைபெற்றது – மாதம்பட்டி ரங்கராஜ்

தேச வளர்ச்சியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பங்களிப்பு அளப்பரியது- உத்தராகண்ட் முதல்வர் புகழாரம்!

நியூசிலாந்து பிரதமருடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சந்திப்பு!

சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்த நாள் – ஆற்காட்டில் விழிப்புணர்வு பேரணி!

ஐப்பசி மாத பௌர்ணமி – சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்!

சென்னை காசிமேட்டில் இறால் கழிவுகளால் சுகாதார சீர்கேடு – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies