ஈரோட்டில் வருகிற 16ம் தேதி தவெக தலைவர் விஜய்யின் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கேட்டு அக்கட்சியின் தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
கரூர் சம்பவத்திற்கு பிறகு தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ளாமல் இருந்து வருகிறார். இதனிடையே, காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்தினார். அதன்பின் எந்தவொரு சந்திப்பயோ, சுற்றுப்பயணத்தையோ விஜய் மேற்கொள்ளவில்லை.
இந்நிலையில், வருகிற 16-ம் தேதி ஈரோட்டில் பொதுக்கூட்டம் நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து, ஈரோட்டில் விஜய்யின் சுற்றுப்பயணத்திற்கு அனுமதி கேட்டு, தவெக தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
















