செவிலியர்களை குற்றவாளிகளை போல அடக்கி ஒடுக்க முயற்சிப்பது தான் திராவிட மாடலா? - நயினார் நாகேந்திரன் கேள்வி!
Mar 22, 2026, 04:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

செவிலியர்களை குற்றவாளிகளை போல அடக்கி ஒடுக்க முயற்சிப்பது தான் திராவிட மாடலா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Murugesan M by Murugesan M
Dec 20, 2025, 08:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக கட்சிக்கு மீண்டும் அரியணை என்பது இனி கனவிலும் கிட்டாது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

சுயநலமற்ற சேவை புரியும் செவிலியர்களின் சாபம் திமுக அரசை இனி அரியணை ஏறவிடாது! திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளின்படி சமவேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அறவழியில் போராடி வரும் செவிலியர்களை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவது, ஊரப்பாக்கத்தில் உள்ள மண்டபத்தில் அடைத்து வைப்பது என அலைக்கழிக்கும் திமுக அரசின் அராஜகப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

அருவருப்புடன் சிலர் விலகிச் செல்லும் நோயாளிகளையும் மனிதநேயத்துடன் முகம் சுழிக்காது தாயுள்ளத்துடன் பேணி வரும் செவிலியர்களை, ஏதோ கொலைக் குற்றவாளிகளைப் போல அடக்கி ஒடுக்க முயற்சிப்பது தான் திராவிட மாடலா? நூற்றுக்கணக்கான செவிலியப் பெண்களைப் பசி, பட்டினியுடன் அடிப்படை வசதிகளின்றி ஒரு மண்டபத்தில் அடைத்து வைப்பது தான் திமுக அரசின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்களுக்கான’ இலக்கணமா? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஆட்சியே முடியப்போகிறது, ஆனால் திமுக கொடுத்த வாக்குறுதிகளை ஏன் இன்னும் நிறைவேற்றவில்லை என எந்தப் பிரிவினர் கேட்டாலும் அவர்களின் குரல்வளையை நெரிப்பது என்ன விதமான பாசிச மனநிலை? குறிப்பாக, பேச்சு வார்த்தைக்காக வரவழைத்த சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்
தங்களை மிரட்டும் தொனியில் பேசியதாக செவிலியர் சங்க நிர்வாகிகள் தெரிவிப்பது திமுக தலைவர்களுக்கு ஆணவம் தலைக்கேறிவிட்டது என்பதைத் தான் நமக்கு உணர்த்துகிறது என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

ஐந்தறிவு கொண்ட அணிலுக்கெல்லாம் பாவம் பார்க்கும் சுகாதாரத்துறை அமைச்சருக்கு, உழைக்கும் வர்க்கத்தினர் மீது கொஞ்சம் கூட இரக்கமில்லை என்பது விசித்திரமாக உள்ளது. தேர்தல் நேரத்தில் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அள்ளி வீசி, மக்களை ஏமாற்றி ஆட்சி அமைத்தவுடன் அதே மக்களின் மீது அடக்குமுறையை ஏவும் திமுக எனும் ஏமாற்றுக்கார கட்சிக்கு மீண்டும் அரியணை என்பது இனி கனவிலும் கிட்டாது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்

Tags: newsDMKநயினார் நாகேந்திரன் கேள்விIs it the Dravidian model to try to suppress nurses like murderers? - Nayinar Nagendran questions
ShareTweetSendShare
Previous Post

கொழுந்துவிட்டு எரியும் வன்முறை : தீக்கிரையான வங்க தேசம் – இந்திய தூதரகம் முற்றுகை!

Next Post

அமெரிக்காவை கலங்கடிக்கும் Epstein Files!

Related News

திமுகவை நிராகரிக்க வேண்டிய நேரம் இது – அண்ணாமலை

அமிட்ஷாவுடன் TTV தினகரன் சந்திப்பு

பிரசாரத்தில் சிறுவர்களை பயன்படுத்தியதாக த.வெ.க மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு

தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்கும் – எல்.முருகன் உறுதி!

கூட்டணியில் இருந்தாலும் போராடித்தான் தொகுதிகள் பெற வேண்டியுள்ளது – திருமாவளவன் வேதனை!

திருப்பரங்குன்றம் மலைக்கு சென்ற இஸ்லாமியர்கள் – போலீசாருடன் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி

அமெரிக்காவின் தாக்குதலுக்கு இடையே கச்சா எண்ணெய் விற்பனை ஜோர் – நாள்தோறும் 1100 கோடி வருமானம் ஈட்டும் ஈரான்!

திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் – பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சந்திரபாபு நாயுடு சுவாமி தரிசனம்!

பாகிஸ்தான் ராணுவத்திற்கும், ஐஎஸ்ஐ-க்கும் இடையே மோதல்!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – கோத்தகிரியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆலோசனை!

இணையத்தில் ஒருவரின் அனுமதியின்றி, அவரது அடையாளம், குரல் அல்லது தோற்றத்தை தவறாக சித்தரிக்கும் பதிவுகளுக்கு தடை – அர்ச்சனா பட்நாயக்

பேச்சுவார்த்தை நடத்த ஈரானிடம் தலைவர்கள் இல்லை – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

ஆர்.எஸ்.எஸ். நிர்வாக அமைப்பில் மாற்றம் – மாநிலங்கள் நீக்கப்பட்டு கோட்டங்களாக பிரிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies