தைவானில் ரயில் நிலையத்தில் கண்ணீர் புகை குண்டுகளை வீசி மர்மநபர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர்.
தலைநகர் தைபேயில் உள்ள முக்கிய ரயில் நிலையம் ஒன்றில் நுழைந்த மர்மநபர் திடீரெனக் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி எறிந்தார்.
இதனால் ரயில் பயணிகள் அலறியடித்து ஓடிய நிலையில் அந்த மர்மநபர் கத்தியால் அங்கிருந்தவர்களை தாக்கி உள்ளார். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்ட நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















