தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு தேர்தல் தோல்வி நடுக்கம் வந்துவிட்டது
திருப்பரங்குன்றம் விஷயத்தில் நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பை வரவேற்கிறேன் என நெல்லையில் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்
நெல்லை மாவட்டம் மாவட்டம் பாளையங்கோட்டை அன்பு நகரில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது அவர் கூறும்போது விரைவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வளமான கூட்டணியாக அமையும் 2026 மிகப்பெரிய ஆட்சி மாற்றம் ஏற்படும் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் காங்கிரஸ் கட்சிகளும் திமுக கட்சியினரும் தெரிவித்து வருகிறார்கள்
தற்போது 125 நாளாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது 100 நாள் வேலை திட்டத்தை 150 ஆக வழங்குவோம் எனத் திமுக தேர்தல் வாக்குறுதி அறிவித்திருந்தது 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் பல்வேறு குளறுபடிகள் இருந்து வந்தது திமுக கட்சினர் வீட்டிலேயே 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் பணியாற்றி வந்தார்கள் வேலை செய்யாமலேயே சம்பளம் வழங்கப்பட்டு வந்தது தற்போது அது போன்று இனி நடைபெறாது ஆண்டுக்கு 125 நாள் வேலைகள் கண்டிப்பாகத் தருவோம் என மத்திய அரசு உறுதி அளித்துள்ளது
திருப்பரங்குன்றத்தில் விளக்கங்கள் ஏற்றலாம் என்பதை வரவேற்க கூடிய விஷயம் பொதுமக்கள் பிரச்சனை ஒரு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது : ஆளுங்கட்சிகள் அரசியல் செய்து மதக் கலவரத்தைத் தூண்டுகோலில் திமுக அரசு செயல்பட்டு வருகிறது
தமிழக அரசு தற்போது நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு என்பது இந்த விஷயம் அல்ல அனைத்து விஷயத்திலும் தோல்வி அடைந்துள்ளது திமுக அரசுத் தேர்தல் வாக்குறுதி அறிவித்த எதுவுமே செய்யவில்லை
அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதிய திட்டம் வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்கள் ஆனால் தற்போது வரை அந்தத் திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் இருக்கிறது
அரசு ஊழியர்கள் சம்பளத்திலிருந்து 10% பிடித்தம் செய்தால் அவர்கள் கட்டிய பணம் கூட அவர்களுக்குக் கிடைக்காது அரசு ஊழியர்கள் இதை நம்பி எப்படி வாபஸ் வாங்குகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியவில்லை :
ஊழல் மட்டுமல்ல திமுக குடும்ப ஆட்சி உதயநிதி ஸ்டாலின் முதல்வராக ஆக்குவதற்கு எதை வேண்டுமானாலும் ஸ்டாலின் செய்வார் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருப்பதற்கான சாத்தியம் இருப்பதாகத் தெரியவில்லை.
மந்திரி சபையில் இடம் கேட்பதாகத் தகவல்கள் வந்துகொண்டிருக்கிறது. : கடந்த ஆண்டு பொங்கலுக்கு திமுக அரசுப் பரிசுத் தொகுப்பு கொடுக்காமல் இந்த ஆண்டு ₹3000 தேர்தலுக்காக அறிவித்துள்ளது.
தமிழக முழுவதும் கனிமவளக் கொள்ளை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது ராதாபுரத்தில் மட்டுமல்லாமல் தென்காசி செங்கோட்டை வழியாகவும் கன்னியாகுமரி மாவட்டம் கலியக்காவல் வழியாகவும் கோவை பாலக்காடு வழியாகவும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது
இந்தக் கொள்ளை சம்பவத்தைத் தடுக்க முடியாமல் தி மு க அரசு செயல்பட்டு வருகிறது தமிழகத்தில் உள்ள கனிம வளங்கள் அனைத்தும் கேரளாவிற்கு கொள்ளையடிக்கப்பட்டு வருவதை கடந்த நான்கரை ஆண்டுகளில் அதிகரித்துள்ளது ஆனால் தமிழகத்திலிருந்து கனிம வளங்கள் பால் உள்ளிட்டவை கேரளாவுக்கு அதிகமாகக் கொண்டு செல்லப்படுகிறது
ஆனால் கேரளாவிலிருந்து கழிவுகள் மட்டும் தமிழகத்தில் வந்து கொட்டப்பட்டு செல்வது வாடிக்கையாகி வருகிறது இதனைத் தமிழக முதலமைச்சர் கண்டுகொள்ளாமல் இருப்பது தங்களுக்கு வேதனை அளிப்பதாகவும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு தேர்தலில் தோல்வி பயம் மட்டுமல்ல தோல்வி நடுக்கமும் வந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்
















