தஞ்சையில் முதல்வருக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது - அண்ணாமலை கண்டனம்!
Mar 19, 2026, 06:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தஞ்சையில் முதல்வருக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது – அண்ணாமலை கண்டனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 28, 2026, 06:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தஞ்சையில்  முதல்வருக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது  செய்யப்பட்டதற்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில்,   தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றிட வலியுறுத்தி இன்று கும்பகோணம் சென்ற தமிழக முதல்வருக்கு  வேம்பக்குடி சுங்கச்சாவடி அருகே கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்ட கரும்பு விவசாயிகளை திமுக அரசு அடக்குமுறையை கையாண்டு கைது செய்துள்ளதை கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.

டெல்டாகாரன் என்று தனக்கு தானே பட்டம் சூட்டிகொண்ட முதல்வர் ஸ்டாலின்
விவசாயிகள் பற்றிய அக்கறையோ, சிந்தனையோ இல்லாமல் இருப்பது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நெல், கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு என்ற தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றாமல் இருப்பது, தங்கள் நிலங்களைக் காக்கப் போராடிய திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போடுவது என இந்த 60 மாதங்களில் விவசாயிகளுக்கு துரோகம் மட்டுமே செய்துவரும் திமுக அரசு, ஆட்சி முடியும் தருணத்திலும் அதையே தொடர்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து ஆயிரம் நாட்களுக்கும் மேலாக தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற போராடிவரும் விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகள் அனைத்தையும் உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், கைது செய்யப்பட்ட விவசாயிகள் அனைவரையும் விடுதலை செய்து, இந்தப் பிரச்சினை தொடர்பாக, விவசாயிகள் மீது எந்த வழக்கும் தொடரக் கூடாது என, திமுக அரசை அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

Tags: farmers arrestAnnamalai condemenedVembakudi toll plazaDMK governmentfarmers protestKumbakonamThanjavur
ShareTweetSendShare
Previous Post

விஜய் கொடுக்கும் வாய்ப்பை காங்கிரஸ் பயன்படுத்திக் கொண்டால் மீண்டும் அதிகாரத்திற்கு வரலாம் – எஸ்.ஏ. சந்திரசேகர்

Next Post

20 மாகாணங்களில் பாதிப்பு : பல பில்லியன் டாலர் இழப்பு : அமெரிக்காவின் பொருளாதாரத்தை பதம் பார்த்த பனிப்புயல்!

Related News

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உலக தண்ணீர் தினம் – காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம்!

I-PAC அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த விவகாரம் – மேற்குவங்க முதல்வருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

கேஸ் சிலிண்டர்கள் கேட்டு விநியோக மையங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம் – மத்திய அரசு

வாரணாசியில் படகில் இப்தார் விருந்து – அசைவ உணவுகளை கங்கையில் வீசிய 14 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ பொருட்களை அனுப்பியது இந்தியா!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – 74 திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு போட்டியிட வாய்ப்பு மறுப்பு!

ஈரான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல் : ஈரான் செயல் தலைவர் அலி லாரிஜானி கொலை – சிறப்பு தொகுப்பு!

தமிழகத்தில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் : நிர்பயா நிதியை முழுமையாக செலவு செய்யாத திமுக அரசு – சிறப்பு தொகுப்பு!

ராஜ்யசபாவில் பெரும்பான்மை பெற்ற NDA : ஓங்கிய பாஜகவின் பலம் – சிறப்பு தொகுப்பு!

நலிவின் விளிம்பில் தமிழக ஜவுளித்துறை : மின் கட்டண உயர்வால் கதறும் தொழில்துறையினர்- சிறப்பு கட்டுரை!

நயினார் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் திமுக முனனாள் மாநில நிர்வாகி ஆர்.கே.வி. ராஜா!

லஞ்ச ஒழிப்புத்துறைக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – அடுத்த வாரம் பட்டியலிடப்படும் என தகவல்!

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு அளிப்பதில்லை – அஷ்வினி வைஷ்ணவ் குற்றச்சாட்டு!

நாடாளுமன்றம் செயல்படும் நாட்களை அதிகரிக்க வேண்டும் – மல்லிகார்ஜுன கார்கே

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies