ஸ்டாலின் ஆட்சியில் தமிழகம் தலைகுனிந்து நிற்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சியில் சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை யாரும் சாலையில் நடந்து செல்ல முடியவில்லை என்றும், கொடுஞ்செயல் செய்பவர்களுக்கு போலீசை கண்டால் அச்சமில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், பள்ளிச் சிறுவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை போதையின் பிடியில் சிக்கியிருப்பதே குற்றச் செயல்களுக்குக் காரணம் எனக் குற்றம்சாட்டிய அவர்,பள்ளி மாணவிகள் வகுப்பறையில் மது அருந்தி வெளியான வீடியோ, திமுக ஆட்சியின் லட்சணத்தை பறைசாற்றுவதாகவும் விமர்சித்துள்ளார்.
தேர்தலில் மாறுதல் வந்தபிறகு, திமுக கூட்டம், மூலை மூலைக்கு அடக்கி ஒடுக்கப்படும் என்றும் இபிஎஸ் உறுதிபட தெரிவித்துள்ளார்.
















