கோவை அருகே அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பட்டியலின அதிகாரி பணியாற்றிய அலுவலகத்தை திமுக தொழிற்சங்க நிர்வாகி மாட்டுச்சாணம் கொண்டு சுத்தம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு போக்குவரத்து கழக பணிமணை திமுக தொழிற்சங்க நிர்வாகி சசிராஜ், இவர் போக்குவரத்து கட்டுபாட்டு அலுவலராக பணியாற்றி வருகிறார்.
சாதி ரீதியிலான பாகுபாடு காட்டி வருவதாக இவர் மீது புகார் எழுந்தது. இந்நிலையில் பட்டியலின சமூகத்தை சேர்ந்த நபர் கிளை மேலாளராக பணியில் சேர்ந்த நிலையில், அவரிடமும் சாதி ரீதியிலான பாகுபாடு காட்டியதால் சசிராஜ்-க்கு மெமோ வழங்கப்பட்டது.
இதையடுத்து தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி பட்டியலினத்தை சேர்ந்த கிளை மேலாளரை உக்கடம் கிளைக்கு இடமாற்றம் செய்தததாக கூறப்படுகிறது.
அவர் பணி மாறுதல் செய்யப்பட்ட நிலையில், ஒரு பணிப்பெண்ணை கொண்டு மேலாளரின் அலுவலகத் தரையை மாட்டுச் சாணத்தால் சுத்தம் செய்துள்ளார்.
இதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகி பல்வேறு கண்டங்கள் எழுந்து வருகின்றன.
















