பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ தரையில் கிடக்கும் ஒரு பெண்ணுடன் தகாத முறையில் இருப்பது போன்ற எப்ஸ்டீன் கோப்புகள் வெளியாகி அதிர்ச்சியடைய செய்துள்ளன.
அமெரிக்க கோடீஸ்வரர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் மற்றும் பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரூ மீது வர்ஜீனியா கியூஃப்ரே என்ற பெண் பாலியல் புகார் அளித்திருந்தார். பிரிட்டிஷ் இளவரசர் ஆண்ட்ரூ மீது பாலியல் புகார் அளித்த வர்ஜீனியா,
கடந்த ஆண்டு ஏப்ரலில் தற்கொலை செய்து கொண்டார். தன் மீதான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை தொடர்ந்து தனது அரச பட்டங்களை துறப்பதாக பிரிட்டிஷ் இளவரசர் ஆண்ட்ரூ அறிக்கை வெளியிட்டார். ஆனால், பட்டங்களை துறக்கும்படி அவரை அரச குடும்பம் வற்புறுத்தியதாகவே கூறப்படுகிறது. தன் மீதான குற்றச்சாட்டுகளை உறுதியாக மறுப்பதாகவும் ஆண்ட்ரூ கூறியிருந்தார்.
இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின்படி சமீபத்தில் எப்ஸ்டீன் கோப்புகள் வெளியிடப்பட்டன. அதில், பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ தரையில் கிடக்கும் ஒரு பெண்ணுடன் தகாத முறையில் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. கடந்த மாதம் வெளியான மற்றொரு ஆவணத்தில், ஆண்ட்ரூ ஐந்து பெண்களின் மடியில் படுத்திருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகியிருந்தன. இந்த புகைப்படங்கள் குறித்து ஆண்ட்ரூ உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தியுள்ளனர்.
















