தமிழக அரசு உத்தரவிட்டும், தைப்பூச நாளில் பத்திரப்பதிவு நடைபெறாததால், வருவாய் இழப்புக்கு யார் பொறுப்பு என்கிற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் சொத்து வாங்குபவர்கள், முகூர்த்த நாட்கள், தமிழ் புத்தாண்டு, தைப்பூசம் போன்ற நன்னாளில் பத்திரப்பதிவு செய்ய ஆர்வம் காட்டுவதுண்டு. இதனை கருத்தில் கொண்டு, இதுபோன்ற முக்கிய நாட்களில் பத்திரப்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்த ஆண்டு தைப்பூசம், ஞாயிற்றுக்கிழமை அன்று வந்தது.
அதனால் அன்றைய தினம் பத்திரப்பதிவு நடைபெற்றிருக்க வேண்டும். மாறாக பதிவுத்துறை தலைவர் சுற்றறிக்கை அனுப்பாததால், அன்று பத்திரப்பதிவுகள் நடைபெறவில்லை.
இதனால், தைப்பூசம் அன்று பத்திரப்பதிவு செய்ய முடியாமல் மக்கள் ஏமாற்றமடைந்தனர்.
















