எல்லையில் ஆக்கிரமிப்பா ? - ராகுல் பேச்சுக்கு வலுக்கும் கண்டனம்
Feb 3, 2026, 01:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எல்லையில் ஆக்கிரமிப்பா ? – ராகுல் பேச்சுக்கு வலுக்கும் கண்டனம்

Manikandan by Manikandan
Feb 3, 2026, 11:46 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய எல்லையில் ஒரு பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளதாக மக்களவையில் ராகுல் காந்தி பேசியதற்கு பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது இந்தியா – சீனா எல்லை விவகாரம் தொடர்பாக முன்னாள் ராணுவ தளபதி எம்.எம். நரவனே எழுதி வெளிவராத புத்தகம் குறித்த கட்டுரையை வைத்துக் கொண்டு ராகுல்காந்தி உரையாற்றினார். இதற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ராகுல்காந்தி மேற்கோள் காட்டும் புத்தகத்தை மக்களவையில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அதனை தாம் பார்க்க வேண்டும் எனவும் கூறினார்…

இதையடுத்து பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, அவையில் விதிகளை மதித்து பேச வேண்டும் எனவும் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களை மட்டுமே அடிப்படையாக கொண்டு பேச வேண்டும் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, விதியை பின்பற்றாமல் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தால் அவையை எப்படி நடத்த முடியும்? என ராகுல்காந்திக்கு கேள்வி எழுப்பினார். குடியரசு தலைவர் உரை குறித்து பேசாமல் வேறு எதையோ பேசி வருகிறீர்கள் எனவும் தங்கள் எண்ணத்திற்கு ஏற்ப அவையை நடத்த முடியாது எனவும் திட்டவட்டமாக கூறினார்.

பின்னர் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் ஆதாரமற்ற தகவல்களைப் பேசுவது ஆபத்தானது என தெரிவித்தார். குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடக்கும்போது, பாதுகாப்பு போன்ற விஷயங்களில் குழப்பத்தை ஏற்படுத்த ராகுல்காந்தி முயற்சிப்பதாகவம் அவர் குற்றம்சாட்டினார்.

இதையடுத்து சீனா, எல்லையின் பெயர், ராணுவ தளபதியின் பெயர் உள்ளிட்டவற்றை குறிப்பிடாமல் ராகுல்காந்தி பேசிய நிலையில் அதற்கு சபாநாயகர் மற்றும் பாஜக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது…

 

Tags: CongressAmitshaborder issuepakistanbjpchinarahulgandhiparliment
ShareTweetSendShare
Previous Post

சிந்து நதிநீர் ஒப்பந்தம் விவகாரம் -வெளியான தீர்ப்பு.. இந்தியா கொடுத்த பதிலடி!

Next Post

“திமுக ஆட்சியில் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை” – மாநிலங்களவையில் அதிமுக எம்.பி குற்றச்சாட்டு

Related News

தமிழகம், கேரளா உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் அரிய வகை கனிம வளங்கள்! – மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி

பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்க புதுச்சேரிக்கு வரும் பிரதமர் மோடி..!

மன்னர்களை பற்றி சர்ச்சை கருத்து சொன்ன திருவமாவளவன்! – கொதித்தெழுந்த இந்து முன்னணி!

உலக தரத்தில் தமிழக ரயில்வே! – தெற்கு ரயில்வே பொது மேலாளர்!

“புத்தகம் வைத்திருக்க வேண்டிய கைகளில் கஞ்சாவா?” – அண்ணாமலை ஆவேசம்!

வரி குறைக்கப்பட்டதற்கு 140 கோடி மக்கள் சார்பில் அமெரிக்காவிற்கு பிரதமர் மோடி நன்றி!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் உரையாடிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்! – அடுத்து வெளியான அறிவிப்பு

மருத்துவமனையில் எச்.ராஜாவைச் சந்தித்து நலம் விசாரித்த நடிகர் ரஜினிகாந்த்!

தமிழ்நாடு அரசு அறிவித்த துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பான தேடுதல் குழுக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி எதிர்ப்பு!

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் வரும் ரயில்வே திட்டங்கள் என்னென்ன? – அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்

“திமுக ஆட்சியில் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை” – மாநிலங்களவையில் அதிமுக எம்.பி குற்றச்சாட்டு

எல்லையில் ஆக்கிரமிப்பா ? – ராகுல் பேச்சுக்கு வலுக்கும் கண்டனம்

சிந்து நதிநீர் ஒப்பந்தம் விவகாரம் -வெளியான தீர்ப்பு.. இந்தியா கொடுத்த பதிலடி!

டாஸ்மாக் கடையின் பாரில் தொழிலாளி தற்கொலை – புகாரளித்த பெண்கள்… போலீசார் முன்பே மிரட்டிய உரிமையாளர்

அமைச்சர் மூர்த்தியின் தொகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை – ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார்!

இந்தியா கேட் போன்று வாஷிங்டனில் வளைவு கட்ட அதிபர் டிரம்ப் திட்டம் – சூசமாக சொன்ன அதிபர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies