வழக்கில் இருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சொத்துகளை மீட்க அக்கட்சியின் மேலிடம் கடன் உதவி செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தேனாம்பேட்டையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சொத்துக்கள் கடந்த 1955ம் ஆண்டு காமராஜாரால் உருவாக்கப்பட்ட நிலையில் காலப்போக்கில் அறக்கட்டளையின் கட்டுப்பாடு டெல்லியில் உள்ள தலைமையிடத்திற்கு மாற்றப்பட்டது. அதில் இருந்து கிடைக்கும் வருவாயை ரேங்கோ பில்டர்ஸ் என்ற நிறுவனத்துடன் பங்கிட தமிழக காங்கிரஸ் முடிவு செய்து ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் ஏற்பட்ட மோதலில் 180 கிரவுண்ட் நிலம் தங்களுக்கே சொந்தம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் அந்நிறுவனம் வழக்கு தொடர்ந்தது, இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் 60 கோடி ரூபாய் பணத்தை கொடுத்து நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் கமிட்டி முடிவு செய்தது.
அதன் படி 30 கோடி ரூபாய் பணத்தை தமிழக காங்கிரஸ் கட்சியும் 30 கோடி ரூபாய் பணத்தை டெல்லியில் உள்ள காங்கிரஸ் மேலிடமும் கொடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நேஷனல் ஹெரால்ட் நாளிதழுக்கு கடன் அளித்த காங்கிரஸ் கட்சி அந்நிறுவனத்தை கையகப்படுத்தியது போல் காமராஜரால் உருவாக்கப்பட்ட காங்கிரஸ் அறக்கட்டளையை டெல்லி மேலிடம் கையகப்படுத்த முயல்வதாக பலரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
















