உலக புற்றுநோய் தினத்தை ஒட்டி சென்னை அடையாறில் விழிப்புணர்வு வாக்கத்தான் போட்டி நடைபெற்றது.
அடையார் புற்றுநோய் இன்ஸ்டிடியூட் இயக்குனர் கல்பனா பாலகிருஷ்ணன், கொடி அசைத்து வைத்த இந்த வாக்கத்தான் போட்டியில் காவல் உதவி ஆணையர் வல்லவன், மருத்துவர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மனித சங்கிலி நிகழ்வு நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காவல் உதவி ஆணையர் வல்லவன் புற்றுநோயை கண்டு யாரும் பயப்பட வேண்டாம் எனவும் அது தைரியமாக எதிர்கொள்ளக்கூடிய ஒன்று எனவும் தெரிவித்தார்.
















