சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவது தொடர்பாக வீடியோ எடுக்க முயன்ற செய்தியாளரை போலீசார் தடுத்து நிறுத்திய சம்பவம் பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பக்கோடா பாயிண்ட் அருகே உள்ள தங்கும் விடுதியில் காவல் துறையினரின் உதவியோடு மது விற்பனை நடைபெறுவதாக செய்தியாளர்களுக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் அங்கு சென்ற செய்தியாளர் வீடியோ எடுக்க முயன்றார். அப்போது அங்கு வந்த போலீசார் செய்தியாளரை தடுத்து நிறுத்தியதுடன், மது விற்றவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதுதொடர்பான வீடியோ வெளியான நிலையில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வலுத்து வருகிறது.
















