பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் தொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மதுரை மண்டேலா நகர் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வருகின்ற 28ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இந்நிலையில் மதுரை அண்ணா நகர் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் நயினார் நாகேந்திரன் தலைமையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் கூட்டத்தினை சிறப்பாக நடத்துவது, எத்தனை லட்சம் மக்கள் கூட்டத்தில் பங்கேற்பார்கள், அவர்களுக்கு என்னென்ன மாதிரியான வசதிகள் செய்ய வேண்டும் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடைபெற்றது.
இதில் பாஜக மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் , மாநில பொதுச் செயலாளர்கள் கருப்பு முருகானந்தம் , பேராசிரியர் ராம சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
















