தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தால் நெசவாளர்களின் பிரச்னைகள் தீர்க்கப்படும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தேர்தல் வரைவு அறிக்கை குழுவில் இடம்பெற்றுள்ள தமிழிசை செளந்தரராஜன் காஞ்சிபுரத்தில் நெசவாளர்களை சந்தித்து பேசினார்.
அவர்களின் குறைகளை கேட்டறிந்த தமிழிசை செளந்தரராஜன், நெசவாளர்களின் குடியிருப்பு சீரமைக்கப்படும் எனவும், அவர்களுக்கான ஊதியம் உயர்த்தப்படும் என்றும் தெரிவித்தார்.
















