புதுக்கோட்டை மாவட்டம், செம்பட்டிவிடுதி பகுதியில் சகோதரியின் குழந்தைகளுக்கு நடைபெற்ற காதணி விழாவில் தாய்மாமன்கள் கொண்டு வந்த சீர்வரிசையை கண்டு பொதுமக்கள் வியப்படைந்தனர்.
செம்பட்டிவிடுதியைச் சேர்ந்த சகோதரர்களான ராஜா, சரவணன் ஆகியோர் தங்களது மூத்த சகோதரியின் குழந்தைகள் காதணி விழாவுக்கு கண்டெய்னர் லாரியில் சீர்வரிசைப் பொருட்களை கொண்டு வந்தனர்.
பழங்கள், இனிப்புகள், நவதானியங்கள், பட்டுப்புடவை, வாஷிங் மிஷன், ஏசி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பொருட்களை சீர்வரிசையாக கொண்டு வந்து உறவினர்கள் மற்றும் கிராம மக்களை வியப்பில் ஆழ்த்தினர்.
சீர் எடுத்துச் சென்ற தாய்மாமன்களை அவர்களது சகோதரி உற்சாகமாக வரவேற்பு அளித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
















