தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில், தொழிலாளி ஒருவர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆலமரத்துப்பட்டி டேம்ரோடு பகுதியில் அசோக்குமார் மற்றும் சரவணன் என்பவர்களுக்குச் சொந்தமான பட்டாசு தொழிற்சாலை இயங்கி வருகிறது.
தொழிலாளி மாசிலாமணி வழக்கம்போல் பட்டாசு கிடங்கில் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக பட்டாசுகள் திடீரென தீப்பற்றி வெடித்தது.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரம் போராடி தீயை முழுவதுமாக அணைத்தனர்.
எனினும், இந்த விபத்தில் பட்டாசு கிடங்கு மற்றும் அருகிலிருந்த கொட்டகை ஆகியவை முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.
















