தேனியில் நாதகவினரிடையே ஏற்பட்ட மோதல் விவகாரத்தில் தலைமறைவான தவெக மாவட்ட செயலாளர் லெஃப்ட் பாண்டியை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனியில் நடைபெற்ற நாதக பொதுக் கூட்டத்தில், தவெகவினர் இடையூறு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக தவெக மாவட்ட செயலாளர் லெஃப்ட் பாண்டி உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து தவெக நிர்வாகிகளான கௌதம், தனவந்தன் மற்றும் வசந்த் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து தலைமறைவாகியுள்ள தவெக மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டி மற்றும் சலாம் ஆகிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
















