சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 20 லட்சம் ரூபாய் வரை பிணையற்ற கடன் வழங்க மத்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்திருப்பது வரவேற்கதக்கது என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், மத்திய நிதிநிலை அறிக்கை 2026-27-ல் சிறு குறு நிறுவனங்களின் வளர்ச்சிக்காக ₹10,000 கோடி ஒதுக்கிய நிலையில், தற்போது கடன் வசதியை மேம்படுத்தும் நோக்கில், பிணையம் இல்லாத கடன் வரம்பை 10 லட்சம் ரூபாயிலிருந்து 20 லட்சம் ரூபாயாக உயர்த்தியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.
எண்ணற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் சிறு குறு நிறுவனங்களின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் கீழ், பாரதத்தின் தொழில்துறை புதுப்பொலிவு பெற்று வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது என்றும் நயினார் குறிப்பிட்டுள்ளார்.
















