கூட்டணிக் கட்சிகளின் நெருக்கடிக்கு அடிபணிந்த திமுக, பிப்ரவரி 22ம் தேதி முதல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவித்துள்ளது.
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கான குழுவை திமுக இதுவரை அமைக்காமல் இருந்தது. இதனால், திமுகவின் கூட்டணி கட்சியினர் அதிருப்தியடைந்தனர்.
குறிப்பாக, திமுக பேச்சுவார்த்தைக்குழுவை அமைக்காதது காங்கிரஸ் தலைவர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் வெளிப்படையாகவே தெரிவித்தார்.
திமுகவின் தாமதம் காரணமாக ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் தமிழக பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக செல்வப்பெருந்தகையும் குறிப்பிட்டார். இத்தகைய தொடர் அழுத்தங்களுக்கு அடிபணிந்த திமுக, தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை குழு விரைவில் அமைக்கப்படும் என அறிவித்துள்ளது.
மேலும், சட்டப்பேரவை அலுவல்கள் நிறைவடைந்தவுடன், பிப்ரவரி 22ம் தேதி முதல் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படும் எனவும் விளக்கம் அளித்துள்ளது.
















