ஓமலூர் அருகே ஏரி பகுதியில் அதிகப்படியான குப்பைகள் கொட்டப்படுவதால் நோய்தொற்று ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அமரகுந்தி பகுதியில் பெரிய ஏரி அமைந்துள்ளது.
இங்கு, கோழி, மீன், ஆடு உள்ளிட்ட இறைச்சி கழிவுகளும், மருத்துவ கழிவுகளும் கொட்டப்படுவதால் கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது.
மேலும், நிலத்தடி நீர் மாசுபடுவதாகவும், பிளாஸ்டிக் கழிவுகளை உண்பதால் கால்நடைகள் உயிரிழக்கும் சூழல் உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
















