கும்பகோணம் அருகே பழமையான 2 ஐம்பொன் சிலைகளை வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற 4 பேரை சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே வளையப்பேட்டை பகுதியில் கடந்த 6ஆம் தேதி சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த காரை சிலை தடுப்பு பிரிவு போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது, காரில் உள்ள சாக்குபையில் சிலைகள் இருப்பதை கண்டறிந்தனர். இதனை தொடர்ந்து, காரில் இருந்த 2 பழமையான ஐம்பொன் சிலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், காரில் பயணம் செய்த மணிகண்டன், ராமச்சந்திரன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
















