திருப்பூர் தொழில்துறையினர், அடுத்த மூன்று ஆண்டுகளில் ஏற்றுமதி செயல்திறனை இரட்டிப்பாக்க வேண்டும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆலோசனை வழங்கியுள்ளார்.
திருப்பூர் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் தொழில் சங்கங்களின் பிரதிநிதிகள், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்தனர்.
அப்போது பேசிய, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஏற்றுமதியாளர்களுக்கு மத்திய அரசு முழுமையான ஆதரவை வழங்கும் என தெரிவித்தார்.
ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் துறையுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினரும், தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களின் வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்தி கொள்ள வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும் திருப்பூர் தொழில்துறையினர், அடுத்த மூன்று ஆண்டுகளில் கூடுதலாக, 5 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, ஏற்றுமதி செயல்திறனை இரட்டிப்பாக்க வேண்டும் என்றும் பியூஷ் கோயல் ஆலோசனை வழங்கினார்.
















