அடிமைத்தனமாக நடத்தும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இருப்பது ஒரு மானக்கேடான விஷயம் என்று பாஜக நிர்வாகி விஜயதரணி தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் திமுக அரசை கண்டித்து பாஜக மகளிர் அணியின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், விஜயதரணி மற்றும் பாஜக, அதிமுகவைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு முழக்கம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்திற்குப்பின் பேசிய விஜயதரணி, குழு அமைத்து 70 நாட்களாகியும் திமுக தங்களிடம் பேசவில்லை என செல்வப்பெருந்தகை கூறியிருப்பது காங்கிரஸ் கட்சியின் பரிதாப நிலையை காட்டுவதாக கூறினார்.
















